வேக்சின் தயாரிக்க முடியவில்லை எனில்.. தூக்கிலா தொங்க முடியும்?.. சதானந்த கவுடா சர்ச்சை.. பரபர பேச்சு
பெங்களூர்: வேக்சின் தயாரிக்க முடியவில்லை என்றால் நாங்கள் என்ன தூக்கிலா தொங்க வேண்டும்? என்று மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க வேக்சின் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. கோவாக்சின், கோவிட்ஷீல்ட் என்ற இரண்டு வேக்சின்கள் மட்டுமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருவதால் மக்களிடையே இதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேக்சின் தட்டுப்பாடு குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பாஜகவை சேர்ந்த மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடா அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், வேக்சின் உற்பத்தி முடிந்த அளவு துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
எங்களால் முடிந்த அனைத்து பணிகளையும் நேர்மையாக, வேகமாக செய்கிறோம். சில விஷயங்களை கட்டுபடுத்த முடியாது. எல்லா விஷயங்களையும் அரசு மாற்றிவிட முடியாது. கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
நாங்கள் என்ன செய்ய முடியும். எங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மக்களுக்கு முடிந்த அளவு வேக்சின் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். நாங்கள் முன்பே திட்டமிட்டதால் இறப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நாங்கள் திட்டமிடவில்லை என்றால் பலி எண்ணிக்கை இதைவிட பல 100 மடங்கு உயர்ந்து இருக்கும். கொரோனா வேகமாக நினைத்ததை விட அதிகமாக உள்ளது. நீதிபதிகளின் உத்தரவுகளை செயல்படுத்தி வருகிறோம். நீதிபதிகளுக்கு எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது.
எங்களிடம் இருக்கும் தொழில்நுட்பங்களை வைத்து முடிந்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தியாவில் எல்லோரும் வேக்சின் பெற வேண்டும் என்று கோர்ட் கூறுகிறது.
அது நல்ல எண்ணம்தான். ஆனால் நாளையே இத்தனை பேருக்கு வேக்சிங் கொடுக்க வேண்டும் என்று கோர்ட் சொல்லி எங்களால் அதை கொடுக்க முடியவில்லை என்றால் நாங்கள் என்ன செய்வது.. வேக்சிங் தயாரிக்க முடியவில்லை என்றால் நாங்கள் என்ன தூக்கிலா தொங்க வேண்டும்? நாங்கள் செய்வது என்று சொல்லுங்கள், என்று சதானந்த கவுடா மிகவும் கோவமாக கேள்வி எழுப்பிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications