வருணா ஓகே.. கோலாரும் வேண்டும்.. மீண்டும் 2 தொகுதிகளில் களமிறங்கும் சித்தராமையா? இப்படி ஒரு காரணமா?
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக உள்ள சித்தராமையா மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் கடந்த தேர்தலைபோல் 2 தொகுதிகளில் களமிறங்க சித்தராமையா விரும்புகிறார். இதனால் கோலார் தொகுதியையும் தனக்கு ஒதுக்கும்படி அவர் கட்சி மேலிடத்திடம் கேட்டுள்ள நிலையில் பின்னணியில் உள்ள காரணம் வெளியாகி உள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க விரும்பும் கட்சிகள் 113 இடங்களில் வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். 2018 ல் தேர்தல் நடந்த நிலையில் தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது.
5 ஆண்டு ஆட்சி முடியும் தருவாயில் உள்ளதால் இன்னும் 2 மாதத்துக்குள் கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க பாஜக முயற்சித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளன. ஆம்ஆத்மி கட்சியும் புதிதாக களமிறங்கி உள்ளது.

கோலாரை கைவிட்ட சித்தராமையா
இந்நிலையில் தான் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக சித்தராமையா உள்ளார். கடந்த 2013 முதல் 2018 வரை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முதல்வராக இருந்த இவர் தற்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். இவர் தற்போது பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில் வரும் தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் கோலார் தொகுதிகளில் கட்சி தலைவர்கள் இடையேயான கருத்து வேறுபாட்டால் சித்தராமையாவின் வெற்றி எளிதாக இருக்காது என்பது தெரியவந்து.

வருணாவில் சித்தராமையா போட்டி
இதனால் சித்தராமையாவின் சொந்த தொகுதியான வருணாவில் போட்டியிடும்படி காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல்காந்தி ஆகியோர் அறிவுறுத்தினர். இதற்கு சித்தராமையா ஒப்புக்கொண்டார். இந்நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் வருணா தொகுதியில் சித்தராமையா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் கோலார் தொகுதியில் போட்டியிடுவதில் இருந்து சித்தராமையா பின்வாங்கியதாக தகவல்கள் வெளியாகின.

2 தொகுதிகளில் போட்டியிட ஆர்வம்
இந்நிலையில் தான் சித்தராமையா கோலார் தொகுதியிலும் போட்டியிட ஆர்வமாக உள்ளார். இதனை சித்தராமையாவே உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நான் கோலார் மற்றும் மைசூர் மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட கட்சி மேலிடத்திடம் விருப்பம் தெரிவித்து இருந்தேன். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் வருணாவில் போட்டியிட கட்சி அனுமதி அளித்துள்ளது. கோலார் தொகுதியில் போட்டியிடவும் சீட் கொடுக்கும்படி கேட்டுள்ளேன். இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது'' என்றார். இதன்மூலம் சித்தராமையா வருணா மற்றும் கோலார் தொகுதிகளில் களமிறங்க திட்டமிட்டு இருப்பது உறுதியாகி உள்ளது.

காரணம் என்ன?
அதாவது கடந்த 2018 தேர்தலில் சித்தராமையா தனது சொந்த தொகுதியான வருணாவை தனது மகன் யதீந்திராவுக்கு விட்டு கொடுத்துவிட்டு மைசூர் மாவட்டம் சாமுண்டேஸ்வரி தொகுதியிலும், பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் போட்டியிட்டார். இதில் சாமுண்டேஸ்வரி தொகுதியில் அவர் தோற்ற நிலையில் பாதாமியில் வெற்றி பெற்றார். அதேவேளையில் வருணாவில் போட்டியிட்ட அவரது மகன் யதீந்திரா வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. இதனால் சித்தராமையா தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும். இதனால் தந்தை சித்தராமையாவுக்காக யதீந்திரா தனது வருணா தொகுதியை விட்டு கொடுத்துள்ளார். இந்த தொகுதியில் சித்தராமையா எளிதாக ஜெயிக்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் யதீந்திரா தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மகனுக்கு வாய்ப்பு வழங்கும் சித்தாராமையா?
இந்நிலையில் தான் சித்தராமையா வருணா தொகுதியுடன் கோலாரிலும் போட்டியிட விரும்புகிறார். இதில் 2 தொகுதிகளிலும் சித்தராமையாக வெற்றி பெற்றால் அதன்பிறகு கோலார் எம்எல்ஏவாக இருந்துவிட்டு வருணா தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்யலாம். அதைத்தொடர்ந்து வருணாவில் அவரது மகன் யதீந்திராவை களமிறக்கி மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கி அரசியலில் ஜொலிக்க வைக்க சித்தராமையா முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications