கடைசி நேரத்தில் பிரச்சனை.. SpaDeX ஒருங்கிணைப்பு பணி மீண்டும் நாளைக்கு ஒத்திவைப்பு.. இஸ்ரோ தகவல்
பெங்களூர்: விண்வெளியில் நம் நாடு சார்பில் விண்வெளி மையம் அமைக்கும் வகையில் இஸ்ரோ சார்பில் ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளியில் செலுத்தப்பட்டுள்ள 2 செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணி இன்று நடந்தது. அப்போது கடைசி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் இந்த பணி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு, செயற்கைகோள்கள் பாதுகாப்பாக உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயற்கைக்கோள்கள் இணைப்பு பரிசோதனையை 9-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பி...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இஸ்ரோ சார்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்திய விண்வெளி துறையில் புதிய மைல்கல்லாக விண்வெளியில் நம் நாட்டுக்கு என்று தனியாக விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான தொடக்க பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.
2035ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நம் நாட்டுக்கு என்று தனியாக விண்வெளிய மையம் அமைத்து விட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தின் ஒருபகுதியாக கடந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் 30ம் தேதி பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டில் 'ஸ்பேடெக்ஸ்' திட்டத்தின் கீழ் 2 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
இந்த 2 செயற்கைகோள்களும் தற்போது தனியாக இயங்கி வருகின்றன. இதனை ஒன்றாக இணைக்கும் பணியை இஸ்ரோ கடந்த 7 ம் தேதி செய்வதாக இருந்தது. ஆனால் திடீரென்று அந்த பணி ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று இஸ்ரோ சார்பில் இரு செயற்கைகோள்களையும் ஒன்றிணைக்கும் பணி தொடங்கியது. அப்போது இரு செயற்கைகோள்களுக்கு இடையேயான தூரத்தை 225 மீட்டராக குறைக்கப்பட்ட நிலையில் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து இரு செயற்கைகோள்களையும் ஒன்றிணைக்கும் பணி தள்ளிவைக்கப்பட்டது.
இதனை இஸ்ரோ உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‛‛இரு செயற்கைகோள்கள் இடையேயான தூரம் 225 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. இரு செயற்கைகோள்களையும் இணைக்கும் பணி நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது செயற்கைகோள்கள் பாதுகாப்பாக உள்ளன'' என்று கூறப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications