"SORRY".. நிஜமாகவே தெரியல.. "ஸாரி.. ஸாரி".. பெங்களூர் ரோடெல்லாம் ஒரே பரபரப்பு.. என்ன காரணம்?
பள்ளி சுவர்களில் ஸாரி என்று எழுதிய மர்மநபர்கள் யார் என்று தெரியவில்லை
பெங்களூரு: ஸாரி.. நிஜமாகவே இப்படி "ஸாரி" சொன்னவர் யார் என்று தெரியவில்லை.. இந்த விநோத ஸாரிதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
பெங்களூருவில் காமக்ஷிபல்யா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாந்திதாமா என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியின் நுழைவாயிலில் ஸாரி என்ற எழுத்து எழுதப்பட்டுள்ளது.. அங்குள்ள சுவர்கள் மற்றும் அதை சுற்றியுள்ள ரோடெல்லாம் "ஸாரி" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது...

பெயிண்ட்
ரெட் கலர் பெயிண்ட்டில் கொட்டை கொட்டை எழுத்தக்களில் "ஸாரி" என்று எழுதப்பட்டுள்ளது. வழக்கம்போல்,
பள்ளிக்கு வந்த மாணவர்களும், ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் இந்த "ஸாரி"யை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்... இப்படியெல்லாம் யார் எழுதியது என்று தெரியவில்லை.. அந்த கையெழுத்துக்கள் அனைத்தும் ஒரே ஒரு நபர் எழுதியதுபோலவே காணப்பட்டது.

நள்ளிரவில் மர்மநபர்கள்
உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்... போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.. ஆனால், எந்த க்ளூவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதால், வழக்கில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.. ஆனால், டெலிவரி பாய்ஸ் வேடத்தில் வந்த மர்மநபர்கள் நள்ளிரவில் இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் மட்டும் சந்தேகம் எழுந்துள்ளது... இந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.

சஸ்பென்ஸ்
மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்தபோது அடையாளம் தெரியாத 2 பேர் பைக்கில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்... அவர்களை கண்டுபிடித்த பின்னரே எதற்காக இப்படி செய்தார் என்பது குறித்து தெரியவரும் என்கிறார்கள்.

ரகசியம்
ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டு, அதற்காக மன்னிப்பும் கேட்டு, சம்பந்தப்பட்டவர் நம்மை மன்னிக்காத பட்சத்தில், இப்படியெல்லாம் ஸாரி கேட்டு கெஞ்சுவோம்.. அவர்கள் சமாதானம் ஆகும்வரை ஸாரி கேட்டுக் கொண்டிருப்போம்.. அதற்காக சில முயற்சிகளை ஒருசிலர் மேற்கொண்டு வந்தாலும், அவர்கள் கோபம் தணியாது.. அப்படிப்பட்டவர்கள் யாராவது இந்த "ஸாரி"க்கு பின்னால் இருக்கக்கூடும் என்றே தெரிகிறது.. அந்த அழுத்தக்காரர்களும் யார் என்று தெரியவில்லை.

"ஸாரி"
அப்படிப்பட்டவர்களை கவர்வதற்காகவே இப்படி ஸாரி என்று எழுதப்பட்டிருக்குமா என்றும் புரியவில்லை.. இதெல்லாம் சினிமாவில்தான் நாம் நாம் பார்த்து கொண்டிருந்தோம்.. இப்போது கண்ணெதிரேயே, அதுவும் படிக்கிற பிள்ளைகளே இப்படி எழுதி வைத்திருப்பது ஆச்சரியத்தை தந்துள்ளது.. இணையத்தில் இந்த ஸாரி வைரலாகி கொண்டிருந்தாலும், இவ்வளவு "ஸாரி" கேட்டும் கோபம் தணியாத அந்த மர்மநபர், ஸாரி அந்த அழுத்தக்காரர் யாராக இருக்கும்?!
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications