Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின்.. சோனியா.. மம்தா.. கெஜ்ரிவால்.. பெங்களூரில் குவியும் தலைவர்கள்.. பேனர்களை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: எதிர் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன. இந்நிலையில், இதற்கான இரண்டாவது ஆலோசனை கூட்டம் இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்கும் விதமாக அவர்களின் உருவம் அச்சிடப்பட்ட பேனர்கள் கூட்டம் நடைபெறும் ஓட்டல் முன்பாக வைக்கப்பட்டிருப்பது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

தற்போது இரண்டாவது முறையாக வெற்றி பெற்று பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. இந்நிலையில் மூன்றாவது முறையும் பாஜக வெற்றிப் பெற வேண்டும் என்று பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மூன்றாவது முறையும் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முறை அவர் மீண்டும் பிரதமராக வெற்றி பெற்றுவிட்டால், நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமரான ஒரே நபர் இவர்தான் என்கிற பெருமையையும் பெறுவார்.

The banners to welcome the opposition leaders in Bengaluru have attracted everyones attention

அதேபோல எதிர்வரும் 2025ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாட பாஜக ஆட்சியில் இருக்க வேண்டியது அவசியமாகும். எனவே இதற்காக கட்சி கடுமையாக உழைத்து வருகிறது. மறுபுறம், இமாச்சல் மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியிருந்தாலும், வட மாநிலங்களில் அதன் செல்வாக்கு கடுமையாக சரிந்து வருகிறது. இதனை ஈடு செய்ய இந்த நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று கட்சி திட்டமிட்டுள்ளது.

இதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கையில் எடுத்திருக்கின்றனர். இதற்கான முதல் கூட்டம் பீகாரின் பாட்னாவில் நடைபெற்றது. இதில் 6 மாநிலங்களின் முதலமைச்சர் உட்பட 17 எதிரக்கட்சித் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் இந்த கூட்டத்தில் 24 கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

The banners to welcome the opposition leaders in Bengaluru have attracted everyones attention

வைகோ தலைமையிலான ம.தி.மு.க., இ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான கொ.தே.ம.க., தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க., இடதுசாரிக் கட்சிகளான ஆர்.எஸ்.பி, பார்வர்டு பிளாக், கேரளத்தில் முக்கிய கட்சியாக இருக்கும் ஐ.யூ.எம்.எல்., கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய கட்சிகள் புதியதாக இந்த கூட்டத்தில் பங்கெடுக்கின்றன. இந்த கூட்டத்தில், குறைந்தபட்ச செயல் திட்டம், பாஜகவுக்கு எதிரான இந்த கூட்டணிக்கு பெயர் சூட்டுவது, பிரதமர் வேட்பாளர் போன்றவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The banners to welcome the opposition leaders in Bengaluru have attracted everyones attention

இந்நிலையில், இந்த கூட்டம் நடைபெறும் பெங்களூருவின் தாஜ் வெஸ்ட் எண்டு ஓட்டல் முன்பு வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கூட்டத்தில் பங்கேற்க வரும் எதிர்க்கட்சித் தலைவர்களின் தனித்தனி உருவப்படங்கள் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+