வீட்டில் சும்மாவே இருந்த கணவன்.. வேலைக்கு போக வைக்க ஆசைப்பட்டு.. ஜெயிலில் கம்பி எண்ணும் மனைவி
பெங்களூரு: எந்த வேலைக்கு போகாமல் வீட்டில் சும்மாவே சோம்பேறியாக சுற்றிக்கொண்டிருந்த கணவரை வேலைக்கு போக வைக்க வித்தியாசமாக சிந்தித்த பெண, அதற்காக செய்த செயலால் தற்போது பெங்களூரு சிறையில் கம்பி எண்ணுகிறார். அப்படி என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.
வடிவேலு ஒரு படத்தில் சும்மாவே இருப்பார், அவரை வேலை செய்ய வைக்க மனைவி பல முயற்சி செய்வார். ஆனால் கடைசி வரை வேலைக்கு போக மாட்டார். இந்நிலையில் இதேபோன்ற ஒரு சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் இளம்பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் கணவர் வேலைக்கு செல்லாமல், வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் அந்த தம்பதி இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது.
இந்நிலையில் அந்த பெண், மல்லேசுவரம் போலீஸ் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். அதில், தான் ஸ்கூட்டரில் வெளியே சென்றேன். செல்லும் வழியில் சாலையோரம் நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றேன். அப்போது மர்மநபர்கள் எனது ஸ்கூட்டரை திருடி சென்றுவிட்டார்கள். அந்த ஸ்கூட்டரில் தங்க நகைகள் இருந்தன என்று புகார் மனுவில் கூறியிருந்தார்
இதுகுறித்து மல்லேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, புகாரின் உண்மை தன்மை குறித்தும் பெண்ணின் நடவடிக்கை குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து மல்லேசுவரம் போலீசார், அந்த பெண்ணை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் கூறிய திடுக்கிடும் தகவல்கள் போலீஸையே அதிர வைதுள்ளது. அந்த பெண் போலீசாரிடம் கூறுகையில், என் கணவர், வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார் இதனால் வருமானம் இன்றி நாங்கள் தவித்தோம். இதனால் எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவரை வேலைக்கு செல்ல வைக்க திட்டமிட்டேன்,.
அதாவது என் திட்டப்படி, நகைகள் திருட்டு போனதாக கூறினால் கணவர் வேலைக்கு செல்வார் என்று நினைத்தேன், இதையடுத்து தனது திட்டப்படி, வங்கி லாக்கரில் இருந்த எனது நகைகளை நண்பர் தனஞ்ஜெய் மற்றும் அவரது கூட்டாளி ராகேஷ் ஆகியோர் உதவியுடன் திருடிவிட்டு போலீசில் பொய்யான புகார் அளித்தேன் என்றார்.
இதையடுத்து சொந்த நகைகளை திருடிய பெண்ணையும், அவருக்கு உடந்தையாக இருந்த தனஞ்ஜெய் மற்றும் ராகேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சும்மாவே இருந்த கணவனை வேலைக்கு போக வைக்க ஆசைப்பட்டு கடைசியில் சிறையில் கம்பி எண்ணுகிறார் மனைவி.












Click it and Unblock the Notifications