சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு.. தகுதி நீக்க வழக்கு குறித்து ஆலோசனை!?
பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை அவரது உறவினர் டிடிவி தினகரன் இன்று நேரில் சந்தித்தார்.
Recommended Video

பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்கிரஹார சிறையில் உள்ள சசிகலாவை அவரது உறவினர் டிடிவி தினகரன் இன்று நேரில் சந்தித்தார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் வருகிறது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில்தான் தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும். தற்போதைய அதிமுக ஆட்சி தொடர்ந்து நடப்பதும், கவிழ்வதும், ஆட்சியில் மாற்றம் நடப்பதும் இந்த தீர்ப்பை பொறுத்துதான் இருக்கும்.
இந்த நிலையில் பரப்பன அக்கிரஹார சிறையில் உள்ள சசிகலாவை அவரது உறவினர் டிடிவி தினகரன் இன்று நேரில் சந்தித்தார். இன்று காலையிலேயே டிடிவி தினகரன் பெங்களூர் சென்றார்.
இதையடுத்து பரப்பன அக்கிரஹார சிறையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இதில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு குறித்து இவர்கள் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.
தீர்ப்பு எப்படி இருக்கும், தீர்ப்பிற்கு பின் எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications