உ.பி. கமலேஷ் திவாரி படுகொலை வழக்கு- கர்நாடகாவில் சிமி தீவிரவாதி கைது
பெங்களூரு: உத்தரப்பிரதேசத்தில் இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்து சமாஜ் இயக்கத்தின் தலைவராக இருந்த கமலேஷ் திவாரி கடந்த வெள்ளிக்கிழமையன்று லக்னோவில் கத்தியால் குத்தப்பட்டும் துப்பாகியால் சுடப்பட்டும் கொல்லப்பட்டார். போலி சமூக வலைதள அக்கவுண்ட் மூலம் கமலேஷ் திவாரியுடன் சிலர் பழகி இருக்கின்றனர்.
பின்னர் கமலேஷ் திவாரியை நேரில் சந்தித்து தீபாவளி இனிப்புகள் வழங்குவது போல் நடித்து இக்கொலையை செய்துள்ளனர். 2015-ம் ஆண்டு இஸ்லாம் மதம் தொடர்பான கமலேஷ் திவாரியின் கருத்துகளுக்கு பழிவாங்கும் வகையில் இக்கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

சூரத் ஸ்வீட் பாக்ஸ்
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த ஸ்வீட் பாக்ஸ் குஜராத்தின் சூரத்தில் வாங்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் குஜராத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

சூரத்தில் 3 பேர் கைது
இதனையடுத்தே இப்படுகொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பேர் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் கைது செய்யப்பட்டு உத்தரப்பிரதேச போலீசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.. மற்றொரு நபர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உடைகள், ஆயுதங்கள்
அத்துடன் கொலையாளிகள் லக்னோவில் தங்கியிருந்த ஹோட்டலில் ரத்த கறை படிந்த உடைகள், ஆயுதங்களை விட்டுச் சென்றுள்ளனர். இவற்றையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் பிரமுகருக்கு தொடர்பு?
இச்சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் கமலேஷ் திவாரியின் குடும்பத்தினர் உள்ளூர் பிரமுகர்கள் மட்டும்தான் இக்கொலைக்கு காரணம்; இது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சிதான் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

முதல்வருடன் சந்திப்பு
இது தொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் கமலேஷ் திவாரி குடும்பத்தினர் சந்தித்து பேசினர். இந்நிலையில் கமலேஷ் திவாரி படுகொலை வழக்கில் தொடர்புடைய நபர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகாவில் சிமி தீவிரவாதி
கர்நாடகாவின் ஹூப்பாளி பகுதியைச் சேர்ந்த முகமது ஜபார் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டவர் என கூறப்படுகிறது.

கொலையாளிகளுடன் தொடர்பு?
இருப்பினும் இப்படுகொலையில் இவருக்கான தொடர்பு குறித்த தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. அதேநேரத்தில் கமலேஷ் திவாரி கொலையாளிகளின் போலி சமூக வலைதள அக்கவுண்ட்டில் இவரும் நண்பராக இருந்தார் என்பதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளாராம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications