பெங்களூரில் விஐடி பல்கலைக்கழகம்: 2015ல் மாணவர் சேர்க்கை
பெங்களூர்: விஐடி பல்கலைக்கழகம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதிய வளாகத்தை அமைத்து வருகிறது. அங்கு 2015-ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி. விஸ்வநாதன் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
விஐடி பல்கலைக்கழக புதிய வளாகத்தை பெங்களூருவில் தொடங்குவதற்கு கர்நாடக அரசு கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது.

இதன் மூலம், பெங்களூரின் கிழக்குப் பகுதியில் பல்கலைக்கழக வளாகத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இப்போது அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வரும் 2015-ஆம் ஆண்டில் பணிகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு ஒருசில பி.டெக். படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு மாணவர் சேர்க்கையும் நடத்தப்படும் என்றார் அவர்.
வேலூரில் உள்ள விஐடி பல்கலைகழகத்தில் பி.டெக் படிக்க இந்த கல்வியாண்டில் 1.94 லட்சம் மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பித்திருப்பதாகவும் விஸ்வநாதன் தெரிவித்தார். கடந்த ஆண்டு 1.66 லட்சம் மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதியதாகவும், 4100 மாணவர்கள் கல்வி பயில தேர்வு செய்யப்பட்டதாகவும் கூறினார்.
வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு கல்வி பயின்றாலும் சென்னையைச் சேர்ந்தவர்கள்தான் அதுவும் சி.பி.எஸ்.இ மாணவர்கள்தான் அதிகம் நுழைவுத் தேர்வு எழுதுவதாகவும் விஸ்வநாதன் தெரிவித்தார்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications