முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி சசிகலா பரப்பன அக்ரஹார சிறையில் மனு
பெங்களூர்: சசிகலாவின் தண்டனை காலம் ஜனவரி 27-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யுமாறு கர்நாடகா சிறைத் துறை நிர்வாகத்தில் சசிகலா விண்ணப்பித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி, அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும்.
தற்போது சசிகலா இந்த நான்கரை ஆண்டுகளில் 43 மாத காலம் சிறை தண்டனையை அனுபவித்துவிட்டார். எனவே 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் என்றால் அவரது தண்டனை காலத்தில் 129 நாட்கள் குறைக்கப்படும். இது முழுக்க முழுக்க நன்னடத்தை கொண்ட குற்றவாளிக்கே பொருந்தும்.
அதிலும் இந்த சலுகையானது குற்றவாளிகளின் உரிமை அல்ல. இது சிறை அதிகாரிகளின் விருப்பமாகும். சசிகலாவின் தண்டனை காலம் ஜனவரி 27-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் முன்கூட்டியே விடுதலை செய்ய பரப்பன அக்ரஹாச மத்திய சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளார்.
அதில் முந்தைய தீர்வை மறுபரிசீலனை செய்யுமாறும் அவர் கோரியுள்ளார். இந்த சிறைத் துறை தற்போது சசிகலாவின் விண்ணப்பத்தை சிறைத்துறைக்கு அனுப்பியுள்ளது. அவர்கள் இந்த விவகாரத்தில் இன்னும் எந்த அழைப்பும் விடுக்கவில்லை. சசிகலா ஏற்கெனவே நவம்பர் மாதமே அபராதத் தொகையான ரூ 10 கோடியை செலுத்திவிட்டார்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications