பெங்களூர் வீட்டில் தனியாக இருந்த பாஜக நிர்வாகி மஞ்சுளா.. அறையில் இருந்த காட்சி.. ஆடிப்போன உறவுகள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் யஷ்வந்தபுரத்தை சேர்ந்த மஞ்சுளா என்பவர், பெங்களூர் மல்லேசுவரம் மண்டல பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த மஞ்சுளா, திடீரென்று எடுத்த முடிவு மொத்த குடும்பத்தையும்ஆடிப்போக வைத்துள்ளது. அவர் ஏன் இப்படி செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

பெங்களூர் யஷ்வந்தபுரத்தை சேர்ந்த 42 வயதாகும் மஞ்சுளா என்பவர் பெங்களூரு மல்லேசுவரம் மண்டல பா.ஜனதா மகளிர் அணியின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது கணவர் உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் மனமுடைந்த மஞ்சுளா, கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்து வந்தார்.

Bangalore bjp Karnataka

இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த மஞ்சுளா, திடீரென்று தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து யஷ்வந்தபுரம் போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எம்.எஸ்.ராமையா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மஞ்சுளா வீட்டில் இருந்து அவர் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது. அதில், 'வாழ்க்கையில் பணம், பெயர், புகழ் ஆகியவை தான் முக்கியம் என்று நினைக்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை. நான் பணம், பெயர், புகழ் சம்பாதித்துவிட்டேன். ஆனால் நிம்மதி கிடைக்கவில்லை. கடந்த சில நாட்களாக நான் நிம்மதி இழந்து தவித்து வருகிறேன். இதனால் மனமுடைந்து நான் இந்த முடிவை தேடி கொள்கிறேன். எனது இந்த முடிவுக்கு வேறு யாரும் காரணம் இல்லை. எனது முடிவுக்கு நான் தான் காரணம்' என்று கூறப்பட்டிருந்தது.

அந்த கடிதத்தை யஷ்வந்தபுரம் போலீசார் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்தார்கள். கணவர் இறந்த துக்கத்தில் மஞ்சுளா இந்த விபரீத முடிவை எடுத்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு மஞ்சுளாவின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு வந்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் நாராயண் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலர் மஞ்சுளாவின் வீட்டுக்கு நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள், மஞ்சுளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். பா.ஜனதா மகளிர் அணி பொதுச்செயலாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+