அந்த ஒரு வார்த்தை! மோடியை வரவேற்காத கர்நாடகா முதல்வர்-துணை முதல்வர்! ஆளுநரும் எஸ்கேப்! பரபர பின்னணி
பெங்களூர்: சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய நிலையில் இன்று பிரதமர் மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளை சந்தித்து பாராட்டினார். அப்போது பிரதமர் மோடியை வரவேற்க ஆளுநர் தாவர்சந்த் கெலாட், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் உள்பட யாரும் செல்லவில்லை.
இது விவாதத்தை கிளப்பிய நிலையில் அதன் பின்னணியில் பிரதமர் மோடி சொன்ன ஒற்றை வார்த்தை உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்படி பிரதமர் மோடி என்ன சொன்னார்? ஏன் பிரதமர் மோடியை வரவேற்க அவர்கள் 3 பேரும் செல்லவில்லை என்பது பற்றிய விபரம் வருமாறு:

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் 3 விண்கலம் கடந்த மாதம் 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இதையடுத்து திட்டமிட்டப்படி கடந்த 23ம் தேதி நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கிய ஆகஸ்ட் 23ல் பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் இருந்தார். இதனால் அவர் அங்கிருந்தபடியே காணொலி காட்சி மூலம் தரையிறங்கும் நிகழ்ச்சியை பார்த்து விஞ்ஞானிகளை பாராட்டினார். தென்ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளின் சுற்றுப்பயணத்தை முடித்த பிரதமர் மோடி இன்று காலை நேரடியாக பெங்களூரில் வந்து இறங்கினார்.
பெங்களூர் பீனியாவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டு மையத்தில் விஞ்ஞானிகளை சந்தித்து பிரதமர் மோடி பாராட்டினார். முன்னதாக பெங்களூர் எச்ஏஎல் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை ஆளுநர் தாவர்சந்த் கெலாட், கர்நாடகா முதல்வர் (காங்கிரஸ்) சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார், அமைச்சர்கள் என யாரும் வரவேற்கவில்லை. அதாவது பொதுவாக ஜனாதிபதி, பிரதமர் ஒரு மாநிலத்துக்கு வந்தால் அவர்களை ஆளுநர் மற்றும் அங்கு ஆட்சி செய்யும் அரசு சார்பில் வரவேற்க வேண்டும் என்பது புரோட்டோகாலாகும்.
ஆனால் இன்று பிரதமர் மோடியை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யாரும் வரவேற்கவில்லை. இதனால் திட்டமிட்டே பிரதமர் மோடியை அவர்கள் புறக்கணித்தார்களா? என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் முதல்வர், துணை முதல்வர் காங்கிரஸ் கட்சியினர் அவர்கள் புறக்கணிக்க அரசியல் ரீதியான காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆளுநர் தாவர் சந்த் கெலாட் ஏன் புறக்கணித்தார்? என்ற கேள்விகள் எழுந்தன. மேலும் இது விவாதத்தையும் கிளப்பியது.
இத்தகைய சூழலில் தான் பிரதமர் மோடியே அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பெங்களூரில் கூறுகையில், ‛‛நான் வெளிநாட்டில் இருந்து கிளம்பியதால் எந்த நேரத்தில் பெங்களூர் வருவேன் என்பது தெரியாமல் இருந்தது. இதனால் என்னை வரவேற்பதற்காக காத்திருக்க வேண்டாம் என முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆளுநரிடம் கேட்டுக் கொண்டேன்'' என தெரிவித்தார்.
இதுபற்றி துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறும்போது, ‛‛நாங்கள் பிரதமர் மோடியை வரவேற்க தயாராக இருந்தோம். நானும், முதல்வரும் எந்த நேரத்திலும் பிரதமர் மோடியை வரவேற்க ஆயத்தமாக இரந்தோம். ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு அதிகாரப்பூர்வமான ஒரு தகவல் கிடைத்தது. அதற்கு நாங்கள் மதிப்பளிக்க வேண்டும். இதனால் விமான நிலையம் செய்யவில்லை'' என்றார்.
இருப்பினும் பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம் செய்துள்ளார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் முதல்வர் வரவேற்க தடை விதித்துள்ளதாக சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛தனக்கு முன்பு இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டியதற்காக கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது பிரதமர் மோடி எரிச்சல் அடைந்துள்ளார். இதனால் வரவேற்க வர வேண்டாம் என தெரிவித்துள்ளார். இது நெறிமுறைகளுக்கு எதிரானது. இதன் பின்னணியில் அற்பமான அரசியல் இருக்கிறதே தவிர வேறு எதுவும் இல்லை.
உதாரணமாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்த நேரத்தில் சந்திரயான் I திட்டம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. அப்போது 2008 அக்டோபர் 22ம் தேதி அகமதாபாத்தில் உள்ள விண்வெளி மையத்துக்கு குஜராத் முதல்வராக இருந்த மோடி சென்றார். இதனை பிரதமர் மோடி மறந்துவிட்டாரா?'' என சாடியுள்ளார்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications