எடியூரப்பாவுக்கு வேலையை ஈஸியாக்கிய சபாநாயகர்.. 17 பேரை தகுதி நீக்கம் செய்தது ஏன்?.. பரபர பின்னணி!
Recommended Video
பெங்களூர்: 17 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்துவிட்டால் எடியூரப்பா ஈஸியாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவார் என தெரிந்தே சபாநாயகர் 17 பேரை தகுதி நீக்கம் செய்ததற்கு ஒரு வலுவான காரணம் உள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத ஆட்சி 15 எம்எல்ஏக்கள் ராஜினாமாவாலும் ஒரு சுயேச்சை எம்எல்ஏவினாலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததாலும் கவிழ்ந்தது. இதையடுத்து முதல்வராக பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா பதவியேற்றார்.
இந்த நிலையில் அவர் வரும் 31-ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வஜூபாய்வாலா உத்தரவிட்டுள்ளார். எனினும் எடியூரப்பா அரசு நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ளது.

பெரும்பான்மை
இந்த வாக்கெடுப்பில் எப்படியும் எடியூரப்பா அரசு வெற்றி பெறுவதற்காக வியூகம் வகுத்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கெனவே 3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டதால் சட்டசபையின் பலம் 221-ஆக இருந்தது. இதில் பெரும்பான்மை கிடைக்க 111 அல்லது 112 தேவைப்பட்டது.

தேவை
இதில் பாஜக எம்எல்ஏக்கள் 105 பேரும் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ ஒருவர் என சேர்த்து 106 பேரின் ஆதரவு இருந்தது. இந்த நிலையில் பெரும்பான்மைக்கு இன்னும் 5 அல்லது 6 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது. இன்று சபாநாயகர் முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

ஆச்சரியம்
அதாவது மேலும் 14 பேரை தகுதி நீக்கம் செய்தால் எடியூரப்பா எளிதில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியும் என தெரிந்தே அவர் அவர்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பாஜகவில்
இதனால் தகுதி நீக்க எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ்- மஜத எம்எல்ஏக்கள் ஆட்சியை பிடித்து 14 மாதங்களே ஆகின்றது. இந்த நிலையில் பதவிக்காக இது போல் இந்த 16 பேரும் (17 பேரில் ஒருவர் சுயேச்சை) பாஜக ஆட்சியின் கீழ் பதவி சுகத்தை அனுபவிக்கக் கூடாது என்பதற்காக சபாநாயகர் இந்த முடிவை எடுத்துள்ளார். எந்த விதத்தில் பாஜக அரசில் இந்த 17 பேரும் இணைந்து பதவிச் சுகத்தை அனுபவிப்பதை தடுக்கவே இத்தகைய முடிவை சபாநாயகர் எடுத்துள்ளார். எதிரியை கூட மன்னித்து விடலாம். ஆனால் துரோகிகளை மன்னிக்கவே கூடாது என்பதே காங்கிரஸ்- மஜதவின் எண்ணமாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications