லீவு கிடைக்கல.. கனடாவில் உள்ள இளைஞருடன்.. ஆன்லைனில் நடந்த நிச்சயதார்த்தம்!
பெங்களூர்: காலம் வேகமாக மாறி வரும் சூழலில், ஆன்லைனில் எல்லா வேலைகளும் நடந்து வருகின்றன. ஆனால், அதற்காக நிச்சயதார்த்தத்தை கூட ஆன்லைனில் நடத்தினால் எப்படி? ஆம், வேறு வழியின்றி நடந்திருக்கிறது. இந்த சம்பவம் சோஷியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
பெங்களூர் தெற்கு சக்ரபாவி கிராமத்தை சேர்ந்தவர் சுகாஷ். இவர் கனடாவில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் உடுப்பியை சேர்ந்த இளம்பெண் மேக்னாவுக்கும் திருமணம் செய்வது என்று பெற்றோர்கள் பேசி முடிவெடுத்திருக்கின்றனர்.

ஆனால், இங்குதான் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. உடல்நலம் சரியில்லை என்று லீவு கேட்டால் கூட, வேண்டா வெறுப்பாக, வாட்ஸ்அப்பில் கனெக்டிங்கில் இருங்கள் என்று கூறி விடுப்பு வழங்கும் இந்த கார்ப்பரேட் உலகில், நிச்சயதார்த்தம் என்று மாப்பிள்ளை சுகாஷ் லீவு கேட்க.. வாய்ப்பில்லை ராஜா என்று சொல்லி நிறுவனம் விடுமுறையை மறுத்திருக்கிறது. ஒரு பக்கம் பெற்றோர்கள் பேசி தேதியை குறித்துவிட்டார்கள். மறுபுறம் மணமகள் மேக்னா, போன்மேல் போன் போட்டு ஊருக்கு வருவீர்களா? என்று விசாரித்துக்கொண்டே இருக்கிறார்.
ஆனால், தற்போது வரை லீவு கிடைக்கவே இல்லை. யோசித்து பார்த்த சுகாஷுக்கு சட்டென ஓர் ஐடியா தோன்றியது. ஆன்லைனில் நிச்சயதார்த்தம் செய்தால் என்ன? என்பதுதான் அந்த யோசனை.
விஷயத்தை பெற்றோர்களிடம் சொல்ல, அவர்கள் அப்படியே நிராகரித்துள்ளனர். இருப்பினும் என்ன செய்வது? லீவு கிடைக்கவில்லை. நல்ல சம்பந்தத்தையும் விட முடியாது. எனவே, ஆன்லைனில் முடித்துக்கொள்ளலாம் என்று ஓகே சொல்லிவிட்டார்கள். இதனையடுத்து உடுப்பியில் உள்ள மண்டபத்தில் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடந்தன. மண்டபத்தில் பெரிய பெரிய எல்இடி டிவிகள் வைக்கப்பட்டன. மேடையில் மணமகள் மேக்னா மற்றும் அவரது உறவினர்களும், மாப்பிள்ளை சுகாஷின் பெற்றோரும் இருந்திருக்கின்றனர்.
மந்திரங்கள் முழங்க நிச்சயதார்த்தம் தொடங்கியது. மாப்பிள்ளை கனடாவிலிருந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். இந்த நிகழ்வுக்கு வந்திருந்த உறவினர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கிறது.
இந்திய நேரத்திற்கும், கனடாவின் நேரத்திற்கும் 9-13 மணி நேரம் வித்தியாசம் இருக்கும். உடுப்பியில் மதியம் 12 மணிக்கு நிகழ்ச்சி நடந்த நிலையில், கனடாவில் மாப்பிள்ளை சுகாஷ் நள்ளிரவு 12 மணிக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.
உணவு தொடங்கி எல்லாம் ஆன்லைனில் டெலிவரி என்று வந்துவிட்ட நிலையில், தற்போது நிச்சயதார்த்தம் கூட ஆன்லைனில் நடந்திருப்பது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் பேசுபொருளாகியுள்ளது.
-
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
திண்டுக்கல்லில் கல்யாண மண்டபத்தில் ஓடிப்போன மணமக்கள்.. ஒரு போன் காலால் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications