நடிக்க வாய்ப்பு தருவதாக இளம்பெண்ணுடன் உல்லாசம்.. சிக்கிய தமிழ் நடிகர்
பெங்களூர்: பெங்களூரில் அழகு நிலையத்தில் பணியாற்றி வரும் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும், திரைப்படத்தின் மூலம் நடிகை வாய்ப்பு பெற்று தருவதாகவும் கூறி உல்லாசம் அனுபவித்து நெருக்கமாக இருக்கும் போட்டோ மற்றும் வீடியோ வைத்து மிரட்டியதாக தமிழ் திரைப்படங்களில் நடித்த நடிகர் சந்தோஷ் மீது பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் பெங்களூர் உல்லால் பகுதியில் தங்கி பசவேஸ்வரா நகரில் உள்ள அழகு நிலையத்தில் பியூட்டிஷியனாக வேலை செய்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

அதேபோல் கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் உள்ள அத்திப்பள்ளியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் கன்னடா மற்றும் தமிழ் திரைப்படங்களில் துணை நடிகராக சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தான் தோழி ஒருவர் மூலம் சந்தோசுக்கு, பியூட்டிஷியனாக பணியாற்றி வரும் இளம்பெண் கடந்த 2019ம் ஆண்டு பழக்கம் ஆனார்.
இதையடுத்து இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பேச தொடங்கினர். நண்பர்களாகி உள்ளனர். அதன்பிறகு இருவரும் அடிக்கடி வெளியே செல்ல தொடங்கினர். இதனால் அவர்கள் இடையேயான பந்தம் இன்னும் நெருக்கமானது. இருவரும் நெருங்கி பழக தொடங்கினர். இந்த சமயத்தில் சந்தோஷ், இளம்பெண்ணிடம் காதலை வெளிப்படுத்தி உள்ளார். ‛‛ஏய் நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதோடு திரைப்படங்களில் நடிகையாக அறிமுகம் செய்து பெரிய ஆளாக்க விரும்புகிறேன்'' என ஆசை வார்த்தைகைளை அள்ளி வீசியுள்ளார்.
அந்த இளம்பெண்ணுக்கும் நடிப்பு மீது பிரியம் இருந்தது. ஆனால் திரைப்படத்துறைக்குள் நுழைவது எப்படி? என்பது தான் தெரியாமல் இருந்தது. இத்தகைய சூழலில் சந்தோஷின் வார்த்தைகள் அவருக்கு நம்பிக்கையை அளித்தன. இதனால் இளம்பெண்ணை அவரை நம்ப தொடங்கினார். மேலும் அவரது காதலையும் ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு இருவரும் அடிக்கடி வெளியே சென்று தனியார் விடுதிகளில் ஒன்றாக தனிமையில் இருந்துள்ளனர். மேலும் இருவரும் சேர்ந்து செல்போனில் போட்டோ, வீடியோக்கள் எடுத்துள்ளனர். மேலும் இளம்பெண்ணுக்கு தெரியாமல் சந்தோஷ் ஆபாசமாகவும் அவரை செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் சந்தோஷின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்து. அதாவது திரைப்படத்தில் வாய்ப்பு வழங்குவதாக கூறியும் அதற்கான நடவடிக்கையை சந்தோஷ் எடுக்காததால் இளம்பெண்ணுக்கு சந்தேகம் வந்தது. இதுபற்றி கேட்டதற்கு சந்தோஷ் மழுப்பலாக பதிலளித்து வந்துள்ளதோடு, அடிக்கடி அவரை வெளியே தனிமையில் சந்திக்க வரும்படி வற்புறுத்தி உள்ளார். இதனால் பயந்துபோன இளம்பெண் அவரை விட்டு பிரிந்தார். தன்னிடம் பேச வேண்டாம் என கூறியுள்ளார். ஆனால் சந்தோஷ் விடவில்லை.
தொடர்ந்து அந்த இளம்பெண்ணுக்கு போன் செய்துள்ளார். மேலும் அவர் பணியாற்றி வரும் அழகு நிலையத்துக்கு சென்று வெளியே வரும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். தன்னுடன் வராவிட்டால் நெருக்கமாக இருக்கும் போட்டோ மற்றும் வீடியோக்களை இணையதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இருப்பினும் இளம்பெண் மறுத்துள்ளார். மேலும் அவர் தங்கியிருக்கும் இடத்துக்கு சென்று சந்தோஷ் தாக்கி துன்புறுத்தி உள்ளார். இதையடுத்து அந்த பெண் சார்பில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் போலீசில் புகார் செய்யப்பட்டத. ஆனால் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் மீண்டும் சந்தோஷ் அந்த இளம்பெண்ணை துன்புறுத்தி உள்ளார். இதையடுத்து கடந்த 15ம் தேதி இளம்பெண் சார்பில் பெங்களூர் ஞானபாரதி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் விசாரணைக்கு ஆஜராக கோரி நடிகர் சந்தோசுக்கு போலீசார் சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications