"அணிய" சொல்லி வற்புறுத்திய பெண்.. ஆத்திரம் தலைக்கேறிய கஸ்டமர்.. கொடூர கொலை!
பெங்களூருவில் பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற நபர் கைதானார்
பெங்களூரு: காண்டம் அணிய சொல்லி, இளம்பெண் வற்புறுத்தியதால்.. ஆத்திரத்தில் அவரை கொன்றே விட்டார் நபர் ஒருவர்.. பெங்களூருவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்தவர் அந்த பெண்.. கணவனை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.. வயிற்று பிழைப்புக்காக பாலியல் தொழில் செய்து வருவதாக தெரிகிறது.

இவருடன் உறவு கொள்ள முகுந்தன் என்பவர் வந்திருக்கிறார்.. இவருக்கு வயது 48 ஆகிறது.. எலக்ட்ரானிக் சிட்டிக்கு அருகில் வசித்து வருபவர்.. சம்பவத்தன்று இந்த பெண்ணிடம் சென்றபோது, உறவு கொள்ள 2500 ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளது.. இதற்கு இருவருமே சம்மதம்
தெரிவித்துள்ளனர்.. பின்னர் பாதுகாப்பாக முகுந்தனை காண்டம் அணிய சொல்லி உள்ளார் ஆனால் முகுந்தன் சம்மதிக்கவில்லை.. மேலும் அந்த பெண்ணிடம் தந்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய் தகராறு நடந்து கடைசியில் முற்றிவிட்டது.
கத்தியை எடுத்து அந்த பெண்ணை குத்திவிட்டு முகுந்தன் தப்பி ஓடிவிட்டார்.. இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் முகுந்தனை கண்டுபிடிக்கவே முடியவில்லை.. பின்னர் சிசிடிவி கேமிராவில் ஒரு பெண்ணுடன் முகுந்தன் ஆட்டோவில் போவதை போலீசார் பார்த்தனர்.
அதைவைத்து மடக்கி பிடித்து முகுந்தனை விசாரித்தபோது, பெண்ணை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.. முகுந்தன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications