நான் அப்படியா பேசினேன்.. இல்லவே இல்லை.. அந்தர்பல்டி அடித்த எடியூரப்பா
தாக்குதல் குறித்த தன் கருத்துக்கு எடியூரப்பா ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு: பல்டின்னா பல்டி இது அந்தர் பல்டியை விட மோசமாக இருக்கிறது. "நானா.. நோ.. நோ.. அப்படியெல்லாம் சொல்லவே இல்லை" என்று பாகிஸ்தானை தாக்கியதால் பாஜகவுக்கு 22 சீட் கிடைக்கும் என்று பேசி விட்டு இப்போது அதை மறுத்து ஒரே போடாக போட்டுள்ளார் எடியூரப்பா!
இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தால் நாடு முழுக்க பரபரப்பு தொற்றிக் கொண்டும், எந்த நேரம் என்ன ஆகுமோ என்ற கவலையும் நிலவி வருகிறது.
இதில் நம் நாட்டு பைலட், பாகிஸ்தான் வசம் சிக்கியிருப்பது நாட்டு மக்களை அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. ஆனால் இது எல்லாவற்றையும் விட்டுவிட்டு, எல்லை போர் விவகாரங்களை பாஜக அரசியலாக்க ஆரம்பித்துள்ளது.

ஆரூடம்
பாஜக தலைவர்கள் இந்த கோணத்தில்தான் இப்போது பேசி வருகிறார்கள். அதிலும் எடியூரப்பா, ஒரு படிமேல போய் பாலகோட் தாக்குதலால் வரப்போகிற தேர்தலில் கர்நாடகாவில் 22 தொகுதிகளில் பாஜக ஜெயிக்க போகிறது என்று ஆரூடமே சொல்லிவிட்டார்.

வீரர்களின் ரத்தம்
எடியூரப்பாவின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்தன. இதுதான் பாஜகவின் நிறம். இதற்காகத்தான் இவர்கள் தாக்குதல் நடத்தினார்களா என்று கடும் கண்டனம் வெடித்துள்ளது. ட்விட்டரில் நெட்டிசன்கள் கண்டமேனிக்கு திட்ட ஆரம்பித்தனர். வீரர்களின் ரத்தத்தில் தேர்தல் லாபம் பார்க்கலாமா? என்று கேள்வி மேல் கேள்வியாக துளைத்தெடுத்தனர்.
|
குமாரசாமி
கர்நாடக முதல்வர் குமாரசாமியும் எடியூரப்பாவை கடுமையாக விமர்சித்திருந்தார். இப்படி எதிர்ப்புகள் கூடி வருவதை கண்ட எடியூரப்பா திடீரென்று தன் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து அப்படியெல்லாம் நான் சொல்லவே இல்லை என்று பிளேட்டை மாற்றி போட்டுள்ளார்.
|
விளக்கம்
இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் தெரிவித்த கருத்து தவறாக வெளியிடப்பட்டுள்ளது. "நிலைமை பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறது"என்றுதான் சொன்னேன். அதுவும் 2 மாதங்களுக்கு முன்பு சொன்னேன். கர்நாடகாவில் மோடி தலைமையில் பாஜக 22 இடங்களை வெல்லும் என்று நான் இப்போது முதன்முறையாக சொல்லவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

நியாயமா?
ஆனால் எப்படி பார்த்தாலும் "நிலைமை பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறது" என்றாலும் சரி, "பாஜக வரும் தேர்தலில் வெற்றி பெற போகிறது" என்றாலும் எல்லாமே ஒரே கருத்துதானே? 22 இடங்களை பாஜக வெல்லும் என்பதை முதன்முறையாக சொல்லவில்லை என்பது சரி, ஆனால் இந்த சமயத்தில் அதுவும் இந்திய வீரரின் உயிருக்காகவும், அவரது நலனுக்காகவும் பாரதமே பிரார்த்தித்து வரும் வேளையில் அதைப் பற்றிக் கவலையே படாமல் பேசியிருப்பது நியாயமா என்பதுதான் நெட்டிசன்களின் கேள்வியாக இருக்கிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications