சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அரசியலாக்கும் பாஜக.. 22 எம்.பி சீட் கிடைக்கும் என்கிறார் எடியூரப்பா!
தாக்குதல் காரணமாக 22 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு: இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு செல்வாக்கு அதிகரித்துவிட்டதாகவும், அலை வீசி வருவதாகவும் கர்நாடகத்தில் 22 எம்பி சீட் கிடைக்கும் என்றும் பேசியுள்ளார் கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான எடியூரப்பா. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்படின்னா எதிர்க்கட்சிகள் சொல்றது எல்லாம் உண்மைதானே? புல்வாமா தாக்குதலை அரசியல் ஆக்கக்கூடாது என்று சொல்லி கொண்டிருந்தால், அதையேதான் செய்து வருகிறது பாஜக.
விமான படை தாக்குதலால் நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறதாக கர்நாடக பாஜக மாநில தலைவர் எடியூரப்பா சொல்லி இருக்கிறார்.

போர் மூளும் அபாயம்
புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்துவிட்டனர். இது சம்பந்தமான எதிர்தாக்குதலை இந்தியா நடத்த, அதற்கு பதிலுக்கு பாகிஸ்தான் இந்திய எல்லையில் களமிறங்க, நேற்று இரு நாடுகளுமே பதற்றமாகி போர் மூளும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

22 தொகுதிகள்
இந்த நிலையில் கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது: "பாலகோட் (பாகிஸ்தான்) பகுதியில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலால் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்கும்.
[Read more: மோடி பக்தி இருக்க வேண்டியதுதான்.. ஆனால் ராஜேந்திர பாலாஜியின் ரவுத்திரம் ரொம்ப பயங்கரமா இருக்கே! ]

மோடி அலை
பாலகோட் தாக்குதலால் நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவான அலையே வீசுகிறது. இது மக்களவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். மீண்டும் மோடி பிரதமராக வெற்றி பெற இது வழிவகுக்கும்" என்றார்.

அதிர்ச்சி
இந்திய விமானி ஒருவரை பாகிஸ்தான் கைது செய்துள்ள நிலையில், எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே புரியாமல், இந்த நேரத்திலும் பாஜக தலைவர்கள் லோக்சபா தேர்தலில் ஜெயிக்க இது உதவும் என்று பேசியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications