கர்நாடகாவில் “மெகா டுவிஸ்டு”.. 2024 தேர்தலில் குமாரசாமியுடன் பாஜக கூட்டணியா? போட்டுடைத்த எடியூரப்பா
பெங்களூர்: எதிர்காலத்தில் குமாரசாமியுடன் இணைந்து போட்டியிடுவோம் என்று பாஜக தலைவரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் சகோதரர் மகன் அஜித் பவார் அக்கட்சியின் 30 எம்.எல்.ஏக்களுடன் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுகுறித்து கடந்த திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி, மகாராஷ்டிராவை போன்ற அதிர்ச்சி நிகழ்வு கர்நாடகாவிலும் நடக்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.
"பாஜகவை ஆதரிக்கப்போவதாக அஜித் பவார் அறிவித்தவுடன் கர்நாடகாவில் என்ன நடக்கப்போகிறதோ என்று அஞ்சினேன். கர்நாடகாவின் அஜித் பவார் யார் என்று பார்க்க காத்திருக்கிறேன்." என அவர் தெரிவித்தார். குமாரசாமியின் இந்த பேச்சு கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவிடம் குமாரசாமியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அவர், "குமாரசாமி சொன்னது முற்றிலும் உண்மை. அவரது கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். குமராசாமியும் நாங்களும் எதிர்காலத்தில் இணைந்து போட்டியிடுவோம்." என்றார்.
தொடர்ந்து பேசிய எடியூரப்பா, "கர்நாடக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்த உள்ளோம். கர்நாடக அரசு ஏராளமான வாக்குறுதிகளை நிறைவேற்றியது. ஆனால், எதையும் செய்யவில்லை. எந்த புதிய கோரிக்கையும் எங்களிடம் இல்லை.
5 கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்றினால் போதும். வரும் வாரத்தில் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் நாங்கள் மேடை போட்டு போராட்டம் செய்வோம்." என்றார். இதில் எடியூரப்பாவின் போராட்ட எச்சரிக்கையை விட குமாரசாமியுடன் கூட்டணி என்ற கருத்து கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமாரசாமியும் அவரது ஆட்சி கவிழ்ந்த பிறகு காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறார். குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போன்றவற்றிலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் அவர் இணையவில்லை. கர்நாடக தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட அவர், முன்பை விட குறைவான தொகுதிகளிலேயே வென்றார்.
2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திலும் மதசார்பற்ற ஜனதா தளம் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் குமாரசாமியுடன் இணைந்து போட்டியிடுவோம் என்று எடியூரப்பா தெரிவித்திருக்கும் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்












Click it and Unblock the Notifications