திப்பு “மேட்டர் வேஸ்ட்”.. முஸ்லிம்களை பாஜக ஒதுக்கவில்லை! கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பளார்
திப்பு சுல்தான் விவகாரம் தேவையற்றது என்றும், பாஜக இஸ்லாமியர்களை ஒதுக்கவில்லை எனவும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு: கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியினர் திப்பு சுல்தானை தொடர்ந்து விமர்சித்து பேசி வரும் நிலையில், திப்பு சுல்தான் தொடர்பான விவகாரம் தேவையற்றது என்றும், வேறு பல விசயங்களை கையில் எடுத்து இருக்கலாம் என்றும் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்து உள்ளார். தான் பதவியில் இருந்தபோது இஸ்லாமியர்களை ஒதுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா ஆட்சியின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24 ஆம் தேதியோடு நிறைவடைகிறது. எனவே ஒன்று, இரண்டு மாதங்களில் கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பதவியேற்ற பிறகு அம்மாநிலத்தில் ஹிஜாப், ஹலால் பிரச்சனை மற்றும் அதனால் வெடித்த மத கலவரங்களால் அம்மாநிலமே அமைதி இழந்து காணப்படுகின்றது.

தொடர் பிரச்சனைகள்
உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற வடமாநிலங்களை போல் கர்நாடகாவிலும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து இருக்கின்றனர். இது அல்லாமல் லிங்காயத்துக்கு மக்களின் எதிர்ப்பு, பாஜக உட்கட்சி பூசல், வேலையிழப்புகள், பெங்களூரு வெள்ளம் போன்ற பிரச்சனைகளால் இந்த தேர்தல் பாஜகவுக்கு கடினமானதாக இருக்கும் என்று பேசப்படுகிறது.

திப்பு சுல்தான் பிரச்சனை
இதன் காரணமாக கர்நாடக மாநில எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மூத்த நிர்வாகிகளை வைத்து இப்போதே தொகுதி வாரியாக அக்கட்சி பொதுக்கூட்டங்களை நடத்த தொடங்கி உள்ளது. இதிலும் திப்பு சுல்தான் மீதான விமர்சனம், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களை அக்கட்சித் தலைவர்கள் பேசி வருவதால் சர்ச்சைகள் சுழன்றடித்துக்கொண்டு இருக்கின்றன.

லிங்காயத்து எதிர்ப்பு
கர்நாடகாவில் பெரிய வாக்கு வங்கியை வைத்துள்ள லிங்காயத்து சமுதாயத்தை சேர்ந்தவரான எடியூரப்பாவை பாஜக அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததுடன், அடுத்தடுத்து லிங்காயத்து மடத்தின் சாமியார்கள் கைது செய்யப்பட்டதால் அந்த சமுதாயத்தினர் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாக கூறப்பட்டுகிறது.

எடியூரப்பாவுக்கு முக்கியத்துவம்
சமீபத்தில் லிங்காயத்து சமுதாயத்தினர் இந்து மதத்திலிருந்து தங்களை விடுவித்து மீண்டும் தனி மத அந்தஸ்து வழங்க வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில்தான் மீண்டும் எடியூரப்பாவுக்கு பாஜக மீண்டும் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடி கலந்துகொண்ட ஷிமோகா விமான நிலைய திறப்பு விழாவில் எடியூரப்பாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

எடியூரப்பா பேட்டி
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த எடியூரப்பா, "நான் கர்நாடக மாநில தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தவில்லை. மக்களவை தேர்தலையும் கவனித்து வருகிறேன். மீண்டும் கர்நாடகாவில் பாஜக ஆட்சி வர பாடுபடுவேன். என்னை பாஜகவில் யாரும் ஒதுக்கவில்லை. கட்சி எனக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. பிரதமர் மோடி என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்.

ஹிஜாப் விவகாரம் பழையது
லிங்காயத்து மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவோம். அவர்களின் கோரிக்கைகள், பிரச்சனைகளை தீர்க்க முயற்சிப்போம். லிங்காயத்து மக்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். திப்பு சுல்தான் VS சாவர்க்கர் சர்ச்சைகளால் பெரிய தாக்கங்கள் ஏற்படாது. ஹிஜாப், ஹலால் பிரச்சனைகள் எல்லாம் பழைய விசயங்கள்.

முஸ்லிம்களை பாஜக ஒதுக்கவில்லை
திப்பு சுல்தான் பிரச்சனை என்பது தேவையற்றது. நாம் கையில் எடுக்க வேண்டிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. பாரதிய ஜனதா கட்சி இஸ்லாமிய சமுதாயத்தினரை புறக்கணிக்கவோ, சிதைக்கவோ இல்லை. நான் முதலமைச்சராக இருந்தபோது இஸ்லாமிய சமுதாயத்தினரை ஒதுக்கவில்லை. அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதற்கும் தீர்வு பெற்று கொடுப்பேன்." என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications