மீனு சரிஞ்சதால், கோழி & முட்டை விலை ஏறிப்போச்சு
சென்னை: சென்னையில் திடீரென கோழி மற்றும் முட்டை விலை மடமடவென உயர்ந்துள்ளது.
மீன் விலை உயர்ந்ததால் மக்கள் கோழியை நாடி வந்த நிலையில் தற்போது கோழி விலையும் உயர்ந்துள்ளது.
இதனால் சாப்பாட்டில் "நான்வெஜ்ஜை" விரும்பும் மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோழி விலை ஏறிப்போச்சு:
தற்போது உரித்த கோழி கிலோ ரூபாய் 160க்கும், தோலோடு உள்ள கோழி கிலோ ரூபாய் 140 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. உயிருடன் உள்ள கோழி கிலோ ரூபாய் 105க்கும் கிடைக்கிறது.

கிலோக்கு 10 அதிகம்:
கடந்த வாரத்தை விட இப்போது கோழிக்கறி கிலோவுக்கு 10 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

தினம் 400 லோடு கோழி:
விலை உயர்வு பற்றி தென் சென்னையில் பேபி புரோட்டீன் கோழி கடை நடத்தி வரும் அடையார் துரை கூறியதாவது,"பல்லடம், நாமக்கல், சேலம், சித்தூர், பலமனேரி, வேலூர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினமும் 400 லோடு கோழி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இன்னும் அதிகமாக கோழி கொண்டு வரப்படுகிறது.

மீன் பிடித்தடை:
தற்போது மீன் பிடி தடைகாலம் என்பதால் காசிமேடு, பழவேற்காடு, ராமேசுரம், தூத்துக்குடி பகுதிகளில் மீன் தட்டுப்பாடு உள்ளது. வெளி மாநில மீன்கள் தான் தற்போது சென்னை உள்பட பல ஊர்களுக்கு வருகிறது.

கோழியை நாடும் மக்கள்:
சில்லறை விற்பனையில் மீன் விலை உயர்ந்துள்ளதால் பலர் கோழி கடையை நாடுகின்றனர். இதனால் வழக்கமான விற்பனையை விட இப்போது கறிக்கோழி விற்பனை அதிகரித்துள்ளது.

விலை உயர்வு இதனால்தான்:
இதனால் கோழிப்பண்ணையாளர்கள் விலையை உயர்த்தி விட்டனர். இதுவே விலை உயர்வுக்கு காரணம் ஆகும்" என்று அவர் கூறினார்.

முட்டை விலையும் உயர்வு:
இதேபோல முட்டை விலையும் உயர்ந்துள்ளதாக கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications