மோடியின் பண ஒழிப்பால் பாதிப்பு.... 2018ல் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.75- 7.5 சதவீதமே!
டெல்லி: பிரதமர் மோடி அறிவித்த பண ஒழிப்புத் திட்டத்தால் நாட்டின் மொத்த உற்பத்தி எதிர்ப்பார்த்ததை விட குறைவாக இருக்கும். அதாவது 6.75 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண ஒழிப்பு மட்டுமல்ல, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வும் வரும் ஆண்டுகளில் ஜிடிபியை பாதிக்கும் என்கிறது இந்த ஆய்வறிக்கை.

இந்த ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் மக்களவையில் இன்று சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில், வரும் 2018-ம் ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி (ஜிடிபி) 6.75லிருந்து 7.5 சதவீத்துக்குள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 2017-ம் ஆண்டைவிட இது 0.75 சதவீதம் குறைவாகும்.
முன்னதாக மத்திய புள்ளியியல் நிறுவனம், 2016-17-ம் ஆண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி 7.1 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது. ஆனால் பண ஒழிப்பு நடவடிக்கையின் பாதிப்பை அது கணக்கில் கொள்ளவில்லை.
பண ஒழிப்பு நடவடிக்கையின் பாதிப்பு, 2016-17-க்கான மொத்த உற்பத்தியில் 0.25 சதவீதத்திலிருந்து 0.50 சதவீதம் வரை இருக்கும் என மற்ற பொருளாதார அமைப்புகள் கணித்துள்ளன.
இந்த ஆண்டு இறுதிக்குள் பண சுழற்சி இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்றும், அதன் பின்னரே 2017 - 2018-ம் ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் பற்றி சரியாகக் கணிக்க முடியும் என்றும் இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக பண ஒழிப்பு நடவடிக்கையால் மொத்த உற்பத்தி விகிதத்தில் பாதிப்பு ஏற்படும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்பு கூறியது நிஜமாகியுள்ளது.
மோடியின் பண ஒழிப்பு நடப்பு ஆண்டு ஜிடிபியை மட்டுமல்ல, அடுத்த ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சியையும் பாதித்துள்ளதை அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே அம்பலப்படுத்தியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications