Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரண்ட தங்க மார்கெட்.. 18 ஆண்டுகளில் இப்படி நடந்ததே இல்லை.. கெவின் வந்த பிறகும் எதிர்பாராத மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை சில நாட்களாகக் குறைந்து பொதுமக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்து வந்த நிலையில், இன்று யூடர்ன் போட்டு விலை ஏறி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கம் விலை சட்டென இந்தளவுக்கு அதிகரிக்க என்ன காரணம்.. இதன் பின்னணி தொடர்பாக நாம் பார்க்கலாம்.

கடந்த சில நாட்களாகவே தங்கம் பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்து வந்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதலே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைத் தவிர மற்ற 3 நாட்களிலும் கிராமுக்கு ரூ.950 குறைந்து இருந்தது. இவ்வளவு வேகமாகத் தங்கம் விலை சரிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்னும் தொடர்ந்து தங்கம் விலை குறையும் என்றே எதிர்பார்த்தனர்.

For the First time in 18 years Gold rate raised 5 percent in one single day in international market

அதிர்ச்சி கொடுத்த தங்கம்

ஆனால், 4வது நாளான இன்றே தங்கம் விலை ட்விஸ்ட் வைத்தது. இன்றைய தினம் காலை, மதியம் என ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது. இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 2560 உயர்ந்து, ரூ.1,14,160க்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிட்டத்தட்ட 5% வரை உயர்ந்துள்ளது. என்னதான் கடந்த 2 ஆண்டுகளாகத் தங்கம் விலை உயர்ந்தாலும் ஒரே நாளில் 5% உயர்ந்ததே இல்லை. ஆனால், இன்றைய தினம் ஒரே நாளில் 5% வரை தங்கம் எகிறியது. நவம்பர் 2008-க்குப் பிறகு, அதாவது கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் தங்கம் விலை எகிறி இருக்கிறது.

என்ன காரணம்!

இதற்கு என்ன காரணம் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கலாம். தங்கம் விலை குறுகிய காலத்தில் அதிகளவில் சரிந்ததால் இப்போது முதலீடு செய்யலாம் என உள்ளே வந்து சில முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ததே இதற்குப் பிரதானக் காரணம். அதாவது தங்கம் குறைந்ததால் முதலீட்டாளர்கள் உள்ளே வந்து வாங்க ஆரம்பிக்கவே இப்போது விலை உயர்ந்துள்ளது.

For the First time in 18 years Gold rate raised 5 percent in one single day in international market

சர்வதேச சந்தை

இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் $4,903 ஆக 5.1% அதிகரித்து வர்த்தகமானது. நேற்று ஒரு கட்டத்தில் $4,403.24 வரை போன தங்கம் ஒரே நாளில் கிட்டத்தட்ட 500 டாலர் உயர்ந்துள்ளது. இது அதிகபட்சமாகக் கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் $5,594.82 வரை போனது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஏப்ரல் மாதத்திற்கான கோல்ட் ப்யூச்சர்ஸ் ஒரு அவுன்ஸ் 6.04% உயர்ந்து, $4,932ஆக உள்ளது..

இது தொடர்பாகப் பிரபல குவானெட்டிவ் கமாடிட்டி நிறுவனத்தின் ஆய்வாளர் பீட்டர் ஃபெர்டிக் கூறுகையில், "அடுத்த அமெரிக்க பெடரல் தலைவராக கெவின் வாஷை நியமிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த அறிவிப்பே தங்கத்தை முதலீட்டாளர்கள் விற்கக் காரணமாக இருந்தது. அதில் விலை ஓவராக சரிந்துவிட்ட நிலையில், இப்போது மெல்ல அதிகரித்து வருகிறது. இப்போது முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்குவதே இதற்கு பிரதான காரணம்" என்றார்.

என்ன நடக்கும்!

வரும் மே மாதம் பெடரல் வங்கி தலைவராகப் போகும் கெவின் வார்ஷ், வட்டியைக் குறைப்பார் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் இருக்கிறது. ஆனால், அவர் கடந்த காலங்களில் பணவீக்கத்திற்கு எதிராகவும் டாலர் பலமாக இருக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். இதற்கான நடவடிக்கையை எடுத்தால் தங்கம் விலை சரியும்.. இதுவே கெவின் பெயர் வந்தவுடன் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றுத் தள்ளக் காரணமாக இருக்கிறது.

இருப்பினும், இந்தச் சரிவு தற்காலிகமாகவே இருக்குமாம். இந்தாண்டு பிற்பகுதியில் தங்கம் விலை உயரலாம் என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். 5000 டாலர் என்ற மேஜிக் நம்பரையே ஏற்கனவே ஒரு முறை தங்கம் தாண்டிவிட்ட நிலையில், மீண்டும் அதே நிலைக்கு நிச்சயம் போகும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+