சீனா செய்த வேலை.. கச்சா எண்ணை உற்பத்தி செய்யும் நாடுகள் உஷாராக வேண்டிய காலம் வந்தாச்சு!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: உலகின் மிகப்பெரிய வாகனச் சந்தையான சீனாவில் மின்சார வாகனங்களின் (EV) பயன்பாடு அதிகரித்து வருவதால், அந்த நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது உலகளாவிய கச்சா எண்ணெய் சப்ளை முறையையே மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது.

2023 ஆம் ஆண்டின்படி, உலக கச்சா எண்ணெய் தேவையில் 16% சீனாவினுடையது. அதாவது, ஒரு நாளைக்கு 16.4 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் அங்கு பயன்படுத்தப்படுகிறது. இது 2008 ஆம் ஆண்டின் 9% உடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய அதிகரிப்பு. இருப்பினும், சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) 2024 இல் 0.8% மற்றும் 2025 இல் கூடுதலாக 1.3% மட்டுமே எண்ணெய் பயன்பாடு அதிகரிப்பு இருக்கும் என்று கணித்துள்ளது.

china ev cars petrol

IEA இன் கணிப்பின்படி, சீனாவின் கச்சா எண்ணெய் நுகர்வு நடைமுறையில், குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற போக்குவரத்து எரிபொருட்களின் தேவை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள், இந்த எரிபொருட்களின் தேவை 2021 ஆம் ஆண்டை விட 3.6% குறையும் என்று சொல்கிறது. இதற்கு ஒரு காரணம், சீனாவின் வீட்டுச் சந்தை மந்தநிலை. இது கட்டுமான இயந்திரங்களில் டீசல் பயன்படுத்தும் தேவையை குறைத்துள்ளது. மற்றொரு மிக முக்கியமான காரணம் மின்சார வாகனங்களின் (EV) விற்பனை அதிகரிப்பு. சமீபத்திய மாதங்களில் சீனாவில் விற்பனையான பயணிகள் கார்களில் பாதிக்கும் மேல் மரபு சாரா எரிபொருளை கொண்டு இயங்கும் வாகனங்கள் (NEV), பிளக்-இன் ஹைப்ரிட்கள் உட்பட ஆகும். இதன் விளைவாக, 2025 ஆம் ஆண்டில் பெட்ரோல் தேவை 6.4% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமான போக்குவரத்து எரிபொருட்களுக்கான தேவை குறைந்தாலும், சீனாவின் பெட்ரோ கெமிக்கல் தொழிலில் கச்சா எண்ணை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கச்சா எண்ணை நுகர்வில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது. நஃப்தா, எத்தேன் மற்றும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் வாயு (LPG) போன்ற முக்கிய பெட்ரோ கெமிக்கல் மூலப்பொருட்களின் பயன்பாடு 2019 முதல் 2024 வரை 59% அதிகரித்துள்ளது. இருப்பினும், சீனா, ஈவியை நோக்கி ஓடுவதால், டீசல் மற்றும் பெட்ரோல் தேவை குறைவதால் இந்த அதிகரிப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

சீனாவின் சுத்திகரிப்புத் தொழில் வேகமாக வளர்ந்துள்ளது. 2011 முதல் 2023 வரை திறன் 42% அதிகரித்து, ஒரு நாளைக்கு 18.5 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பு இருந்தபோதிலும், தற்போதைய பொருளாதார மந்தநிலை காரணமாக, பீப்பாய் சுத்திகரிப்பு குறைந்துள்ளது.

இந்த சூழ்நிலை முக்கிய கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு சவால்களை ஏற்படுத்துகிறது. அவை சீனாவின் தேவைக்காக இதுவரை தங்கள் வணிகத்தை நம்பியிருந்தன. 2023 இல் சீனா ஒரு நாளைக்கு 11.3 மில்லியன் பீப்பாய் எண்ணெயை இறக்குமதி செய்தது. இது உலக உற்பத்தியில் 10% க்கும் அதிகம். சீனா, மின்சார வாகனங்களுக்கு மாறுவது உலகளாவிய எண்ணெய் சந்தைகளுக்கு ஒரு முக்கியமான தருணம். நாடு மரபார்ந்த எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்வதால், எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த எரிசக்தி துறைக்கு ஏற்படும் விளைவுகள் அதிகம். தொழில்முனைவோர் இந்த புதிய சூழ்நிலைக்கு ஏற்ப திட்டமிடல் மாற்றங்களைச் செய்ய வேண்டிய அவசியத்தை இது வலியுறுத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+