இண்டிகோ, ஏர் இந்தியாவுக்கு ஷாக்.. ஒரே நாளில் விமான எரிபொருள் விலை டபுள் மடங்கு உயர்வு..!!
மத்திய கிழக்கில் முடிவுக்கு வராத போர் சூழ்நிலை உலகளாவிய எரிபொருள் சந்தையை தொடர்ந்து நெருக்கடியிலேயே வைத்துள்ளது. ஒருபக்கம் போதுமான சப்ளை வளைகுடா நாடுகளில் இருந்து வராமல் இருப்பது, மறுபுறம் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்வது என இந்தியா போன்ற எரிபொருள் இறக்குமதி சார்ந்த நாடுகளுக்கு பெரும் சிக்கலாக உள்ளது.
இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று இந்தியாவில் சிலிண்டர் மற்றும் எரிபொருள் விலையில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இது ஒவ்வொரு மாதமும் நடக்கும் விஷயம் என்றாலும், ஏப்ரல் 1 ஆம் தேதி எரிபொருள் விலை தடாலடியாக உயர்ந்து இன்றைய நாளை மிகவும் முக்கியமானதாக மாற்றியுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இன்று வர்த்தக சிலிண்டர் விலை 195.50 ரூபாய் உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து விமான எரிபொருள் (ATF) விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திடீர் உயர்வு, விமான நிறுவனங்கள் மற்றும் பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது மட்டும் அல்லாமல் பங்குச்சந்தையிலும், மக்களின் செலவுகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் விஷமாக உள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில், விமான எரிபொருள் விலை இன்று 115% க்கும் அதிகமாக உயர்ந்து, ஒரு கிலோலிட்டருக்கு 2.07 லட்சம் ரூபாய் என்ற வரலாற்று உச்ச அளவை எட்டியுள்ளது. முன்பு இதன் விலை 96,638.14 ரூபாயாக மட்டுமே இருந்த நிவையில் தற்போது 2,07,341.22 ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக ATF விலை 2 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1 கிலோலிட்டர் என்பது 1000 லிட்டராகும்.
மார்ச் 1-ஆம் தேதி விமான எரிபொருள் விலை சுமார் 5.7% அதாவது 5,244.75 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்ட நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி 1,10,703.08 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த உயர்வு டெல்லியில் மட்டும் நடக்கவில்லை, நாடு முழுவதும் அனைத்து சந்தையிலும் உயர்த்தப்பட்டு உள்ளது. டெல்லியில் 2.07 லட்சம் ரூபாயாக இருக்கும் ATF, கொல்கத்தாவில் 2,05,955.33 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகப்படியாக 2,14,597.66 ரூபாயாக உயர்ந்துள்ளது. மும்பையில் ATF விலை 1,94,968.67 ரூபாயாக உள்ளது. மும்பையில் மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் ATF விலை குறைவாக இருந்தாலும், கடந்த மாதம் 90,451.87 ரூபாயாக இருந்த விலையுடன் ஒப்பிடும்போது மிகப்பெரிய உயர்வாகும். நாட்டிலேயே மும்பையில் அதிகப்படியாக இன்று விமான எரிபொருள் விலை 1.14 லட்சம் ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது.
விமான எரிபொருள் விலை உயர்வின் முக்கிய காரணம், ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் மத்தியில் நிலவும் போர். இந்த போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்களும், விலை உயர்வும் தான் இன்றைய விமான எரிபொருள் மற்றும் வர்த்தக சிலிண்டர் விலை உயர்வுக்கான முக்கிய காரணம்.
விமான எரிபொருளில் ஏற்பட்டுள்ள இன்றைய விலை உயர்வு, விமான நிறுவனங்களின் செலவுகளை பெரிதும் அதிகரிக்கும். குறிப்பாக இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற பயணிகள் விமான சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் சுமையாக மாறக்கூடும் என்பதால் இந்நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
ATF என்பது விமான நிறுவனங்களின் மொத்த செலவில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. எனவே, இந்த விலை உயர்வு நேரடியாக லாபத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் இன்று பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள இண்டிகோவின் இண்டர்குளோப் மற்றும் ஸ்பைஸ்ஜெட் பங்குகள் விலை சரியலாம்.
மேலும் எரிபொருள் விலை உயர்வின் தாக்கத்தை சரி செய்ய விமான நிறுவனங்கள் உடனடியாக டிக்கெட் விலையை உயர்த்தும். இது மக்களை நேரடியாக பாதிக்கும். விமான எரிபொருள் விலை தடாலடியாக அதிகரித்துள்ளதால், விமான டிக்கெட் கட்டணங்கள் உயர்வது உறுதி, இதை விமான நிறுவனங்களால் தவிர்க்க முடியாது. இதனால், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணச் செலவுகள் விரைவில் அதிகரிக்கலாம்.
இந்தியாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு போதுமான அளவு ATF கையிருப்பில் இருப்பதாக ராஜ்யசபாவில் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இதனால் விநியோகத்தில் உடனடி சிக்கல் இல்லையென அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications