ஜவுளிக் கடைகளில் இனி உட்கார்ந்து வேலை செய்யலாம்.. கேரளாவில் இன்னொரு புரட்சிகர முடிவு!
கேரளக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சட்டத்தில் தொழிலாளிகளுக்குச் சாதகமான திருத்தங்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் துணிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஊழியர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை பார்க்கும் அனுமதியை வழங்கும் வகையில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே முன்மாதிரியான சட்டம் என பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த சட்டம் அக்டோபர் 26 முதல் அமலுக்கு வந்துள்ளது.
1960-ம் வருடத்திய 'கேரள கடைகளும் வணிக நிறுவனங்களும்’ சட்டத்தில் தொழிலாளிகளுக்கு சாதகமான திருத்தங்கள் செய்வது தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் அவசர சட்ட ஒப்புதல் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் துணி, நகைக் கடைகள் மற்றும் உணவகங்களில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்வதற்கு அனுமதி கிடையாது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கேட்கவே வேண்டாம் கழிவறைக்கு செல்ல கூட அனுமதி கிடைப்பதில்லை. வாடிக்கையாளர் இல்லையென்றாலும், வேலை முடியும் வரை ஊழியர்கள் நின்றுகொண்டுதான் இருக்க வேண்டும். இதனால் பல ஊழியர்கள் உடல் நல பாதிப்புக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகினர்.

தொழிலாளர்கள் போராட்டம்
இந்த நிலையில் பணி நேரத்தில் உட்காரவும், ஓய்வெடுக்கவும் வாய்ப்பு வழங்க வேண்டும் என கேரளாவில் பல்வேறு மையங்களில் பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உட்கார்ந்து வேலை செய்ய சட்டம்
இதையடுத்து, 1960ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘கேரளக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சட்டத்தில் தொழிலாளிகளுக்குச் சாதகமான திருத்தங்கள் செய்வது தொடர்பான மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் அவசர சட்ட ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, இந்த சட்டம் அக்டோபர் 26 முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்ட மசோதாவின்படி, வேலை நேரங்களில் உட்கார்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் வரை அபராதம்
இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு, மேலே கூறப்பட்ட சட்டத்தின் கீழ் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். 1960ஆம் ஆண்டு சட்டத்தின் 29வது பிரிவின்படி முதல் முறை விதி மீறும்போது, 5,000 ரூபாய் முதல் 1 லட்சம் வரை அபராதமும், இரண்டாவது முறை விதி மீறும்போது பத்தாயிரம் ரூபாயும், தொடர்ந்து விதிமுறையை மீறும்போது இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் லீவு
புதிய சட்ட மசோதா, பெண்களுக்கு நைட் ஷிஃப்ட் வேலை அளிக்கவும் வழிவகை செய்துள்ளது. ஆனால், 5 பேர் கொண்ட குழுவில் 2 பேராவது பெண்கள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இரவு பயண வசதியையும் நிறுவனமே செய்துதர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்தில் ஒரு நாளாவது முழுமையாக விடுப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக தொழிலாளர்கள்
தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளன. இதில் வேலை செய்யும் தொழிலாளர்கள், பெண் ஊழியர்கள் நின்று கொண்டுதான் வேலை செய்கின்றனர். கேரளா போல தமிழ்நாட்டிலும் இது போல சட்டம் இயற்றினால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள். அரசு ஆலோசிக்குமா?.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications