கோவில்பட்டியில் கேந்தி பூ விலை கடும் வீழ்ச்சி- விவசாயிகள் வேதனை
கோவில்பட்டி: கோவில்பட்டியில் கேந்தி பூ விளைச்சல் அதிகமாக இருப்பதால் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
கோவில்பட்டி அருகே வில்லிசேரி, நாலாட்டின்புதூர், முடுக்குமீட்டான்பட்டி, கிளவிபட்டி, மந்திதோப்பு, இடைசேவல், காமநாயக்கன்பட்டி, கழுகுமலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கிணற்றுப் பாசனம் மூலம் கேந்தி பூ விளைவிக்கப்படுகிறது.

இந்த கிராமங்களில் விளையும் கேந்தி பூக்கள் கோவில்பட்டி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மார்கெட்டுகளுக்கு விவசாயிகள் மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர்.
முகூர்ந்த நாள், பண்டிகை நாட்கள், கோவில் திருவிழாவின் போது கேந்திபூக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். இந்த ஆண்டு பருவ மழை ஓரளவு பெய்ததால் கிராமங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் ஓரளவு நிரம்பியது.
இதனால் கோவில்பட்டி சுற்று வட்டார கிராமங்களில் கேந்தி பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் அவற்றின் விலையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து கேந்தி பூக்களை ரூ.10 முதல் ரூ.15க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
இதனால் செலவு தொகையை கூட ஈடு கட்ட முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். கடந்த காலங்களில் மார்க்கெட்டுகளில் கிலோவுக்கு ரூ.50 வரை விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விலை குறைவால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications