பெப்சிகோ இந்தியாவில் ரூ.33,000 கோடி முதலீடு: இந்திரா நூயி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் பெப்சிகோ நிறுவனம் வரும் 2020 ஆம் ஆண்டுக்குள் தமது பங்குதாரர்களுடன் இணைந்து ரூ.33,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் சிஇஓ இந்திரா நூயி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இந்திரா நூயி சந்தித்து பேசினார். அதன் பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் முதலீட்டு வளம் அதிக அளவில் உள்ளது. இதுவே எங்களை கவர்ந்துள்ளது.

பெப்சிகோ நிறுவனத்திற்கு இங்கு அதிகஅளவில் சந்தை இருக்கிறது. எனவே பல ஆண்டுகளாக நாங்கள் வெற்றிகரமாக தொழிலை நடத்திவருகிறோம் என்றார்












Click it and Unblock the Notifications