ரெப்போ ரேட்டில் 50 புள்ளிகள் குறைப்பு.. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் ரூபாய் மதிப்பு உயர்வு!
நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, வங்கிகளின் குறுகிய காலக் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி வீதமான ரெப்போ ரேட்டை 50 புள்ளிகள் குறைத்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி.
அதாவது 7.25 சதவீதமாக இருந்த வட்டிவீதம் அரை சதவீதம் குறைக்கப்பட்டு, 6.75 சதவீதமாக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இதனால் தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு அறிவிப்பை அடுத்து இந்திய பங்குச் சந்தைகளில் மீட்சி ஏற்பட்டுள்ளது.
நடப்பாண்டில் நான்காவது முறையாக ரெப்போ வட்டிவிகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2015 ஜனவரி முதல் இதுவரை 1.25 சதவீதம் வரை வட்டி விகதம் குறைக்கப்பட்டுள்ளது. 2011-க்குப் பிறகு ரெப்போ வீதம் மிகக் குறைந்த அளவுக்கு வந்திருப்பது இதுதான் முதல் முறை.
அதேநேரம் நுகர்வோர் குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் 3.66 சதவீதமாகக் குறைந்துவிட்ட நிலையில், இந்த வட்டிக் குறைப்பு பணவீக்கத்தை நிலைப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது.
இந்த வட்டிக் குறைப்பு குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறுகையில், "நாட்டின் பணவீக்கத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவரவும், வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் ரெப்போ ரேட் குறைக்கப்பட்டுள்ளது," என்றார்.
யெஸ் வங்கியின் தலைமை பொருளாதார ஆலோசகரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான சுப்பா ராவ் கூறுகையில், "ரிசர்வ் வங்கி இந்த முறை மேலும் 25 புள்ளிகள்தான் குறைக்கும் என்று எதிர்ப்பார்த்தோம். ஆனால் ஆச்சர்யம் தரும் விதமாக 50 புள்ளிகள் குறைத்துள்ளது. மத்திய அரசு இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு மேலும் சீர்த்திருத்தங்களை வேகப்படுத்த வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
ரூபாய் மதிப்பு உயர்வு
குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. இதன் எதிரொலியாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 66.12 ஆக உயர்ந்துள்ளது.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications