ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி தவிர யாருக்கும் இடமில்லை- ரிசர்வ் வங்கி திட்டவட்டம்!
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியை தவிர யாருடைய உருவப்படமும் அச்சிடப்பட மாட்டாது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் லலித் தோஷி நினைவு சொற்பொழிவு விழாவில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனிடம், இந்திய இலக்கியத்தின் பெருமைக்குரிய அடையாளமாக திகழும் ரவீந்திரநாத் தாகூர், இந்திய அணு தொழில்நுட்பத்தின் முன்னோடியாக விளங்கிய ஹோமி பாபா ஆகியோரின் படங்களை இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிட்டால் என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரகுராம் ராஜன், ரூபாய் நோட்டில் அச்சடிக்கும் அளவுக்கு இந்தியாவில் எத்தனையோ உயர்ந்த தலைவர்கள் உள்ளனர்.ஆனால்அவர்களின் உருவங்களை ரூபாய் நோட்டுகளில் அச்சடித்தால் சர்ச்சை உருவாகும் என்பதை நான் உணர்கிறேன்.
அப்படி அடிக்கப்பட்டால் உண்மையிலேயே யார் சிறந்தவர் என்பது தொடர்பாக பல விவாதங்கள் எழும். எனவே, நாட்டில் உள்ள உயர்ந்த தலைவர்களில் எல்லாம் சிறந்தவரான மகாத்மா காந்தியை தவிர யாருடைய உருவப்படத்தையும் ரூபாய் நோட்டுகளில் அச்சிடும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications