3 ஆண்டுகளுக்குப் பின் 21 ஆயிரம் புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை பங்குச் சந்தை 21 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து பின்னர் சரிந்தது. ஆனால் விப்ரோ, டிசிஎஸ் போன்ற ஐடி நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்றைய வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 21 ஆயிரம் புள்ளிகள் கடந்து வர்த்தகம் ஆனது. இது கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும். பிறகு சரிவுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 42.45 புள்ளிகள் சரிந்து 20,725.43 என்ற நிலையிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 14.24 புள்ளிகள் சரிந்து 6,151.81 என்ற நிலையிலும் வர்த்தகம் நிறைவு பெற்றது.
டாடா குளோபல், எல் அன்ட் டி, எச்.டி.எப்.சி வங்கி, டி.எல்.எப் போன்ற நிறுவனங்களின் பங்குகள் லாபத்தை அடைந்தன.
ஆனால் யுனிடெக், ஜெபி பவர், விப்ரோ, எஸ் வங்கி, டிசிஎஸ் நிறுவனங்களின் பங்குகள் நட்டத்தை சந்தித்தன.












Click it and Unblock the Notifications