Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா!
மும்பை: உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, தனது நிறுவனம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டினாலும், கடந்த ஆறு ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்..? இதோடு இந்த 'ஒரு ரூபாய்' சம்பளம் எப்படி, எங்கு உருவானது தெரியுமா..? இதில் சுவாரஸ்யமான விஷயம் இருக்கு.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில் இந்த முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இது பலரையும் வியக்க வைத்துள்ளது. ஒவ்வொரு பெரிய நிறுவனங்களின் தலைவர்களும் பொறுப்பில் இருக்கும் போது தங்கள் நிறுவனத்தில் சம்பளமாகவோ அல்லது கொடுப்பனவாகவோ ஒரு பெரும் தொகையை பெறுவது வழக்கம். ஆனால் ஒரு சிலர் மட்டுமே சம்பளம் பெறாமல் பணியாற்றுகின்றனர். இதில் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் துவங்கி முன்னாள் தமிழ்நாட்டு முதல்வர் ஜெ.ஜெயலலிதா (1 ரூபாய்) வரை பலரும் இதை செய்துள்ளனர்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் சாதனை
2025-26 நிதியாண்டில் (FY26) ரிலையன்ஸ் நிறுவனம் வரலாற்று சிறப்புமிக்க லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இக்குழுமத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.95,754 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.18,19,103 கோடியைத் தொட்டுள்ளது. இத்தகைய பிரம்மாண்ட லாபத்தை ஈட்டிய நிலையிலும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தனக்காக சம்பளம், கொடுப்பனவு, பிற சலுகைகள், ஓய்வூதியப் பலன்கள், கமிஷன் அல்லது பங்கு விருப்பங்கள் எதையும் பெறவில்லை.
6 ஆண்டுகளாக ஜீரோ சம்பளம்
முகேஷ் அம்பானி 2020 ஜூன் மாதம் முதல் தனது சம்பளத்தையும் முழுவதுமாக ஏற்க மறுத்துவிட்டார். அப்போது கொரோனா பெருந்தொற்று இந்தியாவின் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் பெரிதும் பாதித்திருந்தது. அந்த நெருக்கடியான காலத்தில் நாட்டுக்கும், நிறுவனத்திற்கும் ஆதரவாக இந்த முடிவை அவர் எடுத்தார், இது இன்று வரையில் தொடர்கிறது.
அதற்கு முன்பே, 2009 நிதியாண்டு முதல் 12 ஆண்டுகளாக எவ்விதமான மாற்றமுமின்றி தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக முகேஷ் அம்பானி பெற்று வந்ததும் முக்கியமான விஷயம். நிறுவனத்தின் வருமானம் மற்றும் லாபம் எவ்வளவு அதிகரித்தாலும் அந்த 15 கோடி ரூபாய் வரம்பை முகேஷ் அம்பானி தாண்டவில்லை.
முகேஷ் அம்பானி வாரிசுகள்
முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி ரூ.12.17 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். முகேஷ் அம்பானியின் மற்ற இரு வாரிசுகளான ஈஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோர் பொது இயக்குநர்களாக உள்ளனர். அவர்கள் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் ஜியோ நிறுவனங்களிலிருந்து தனித்தனியே சம்பளம் பெற்றுள்ளனர்.
முகேஷ் அம்பானியின் இந்த முடிவு பலருக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது. நிறுவனம் பெரிய லாபம் ஈட்டினாலும், தனிப்பட்ட ஆதாயத்தை விட நாட்டின் நலனை முன்னிறுத்தும் தலைமைத்துவத்தின் சிறந்த உதாரணமாக இது பார்க்கப்படுகிறது.
1 டாலர் சம்பளம் டிரெண்ட்
இந்த "டாலர்-க்கு-ஒரு-வருடம்" (Dollar-a-year) என்ற முறை அமெரிக்காவில் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர் காலத்தில் (1900-களின் முற்பகுதியில்) உருவானது. போர்க்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவும், நிர்வாகத்தை வழிநடத்தவும் பெரிய தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகள் அரசாங்கத்திற்கு உதவ முன்வந்து 1 டாலர் சம்பளம் பெறும் முறையை அறிமுகம் செய்தனர்.
ஆனால், அமெரிக்க சட்டப்படி அரசு அதிகாரிகளாகப் பொறுப்பில் இருப்பவர்கள் இலவசமாக வேலை செய்ய முடியாது என்பதால், கட்டாயம் குறைந்தபட்ச சம்பளம் பெற வேண்டும். எனவே, இந்தச் சட்டத்தை நிறைவு செய்ய 1 டாலர் சம்பளமாக வழங்கப்பட்டது.
நவீன யுகத்தில் அமெரிக்க கார் நிறுவனமான Chrysler-ன் தலைமை செயல் அதிகாரியான லீ ஐக்கோக்கா (Lee Iacocca) 1978-ம் ஆண்டு ஒரு டாலர் சம்பளத்தை பெற்று மீண்டும் இந்த டிரெண்டை கொண்டு வந்தார். அந்நிறுவனம் பெரும் நெருக்கடியில் இருந்தபோது, அதை காப்பாற்றும் நோக்கில் அவர் தனது சம்பளத்தை வெறும் ஒரு டாலராகக் குறைத்துக் கேட்டார்.
இந்த போக்கை பின்பற்றி, ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஆரக்கிள் நிறுவனர் லாரி எலிசன் உள்ளிட்டோர் 1 டாலர் முறையைப் பின்பற்றினர். ஆனால் டெக் நிறுவன தலைவர்கள் தங்களது சம்பளத்தை முழுமையாகத் தியாகம் செய்துவிட்டு, நிறுவனத்தின் பங்குகள் (Stock Options) மற்றும் நிறுவன வளர்ச்சியின் மூலம் லாபம் பெறும் முறையைத் தேர்வு செய்தனர்.
தற்போது டெக் உலகில் எலான் மஸ்க் (Tesla), மார்க் ஜூக்கர்பர்க் (Meta) போன்ற பெரும் பணக்காரர்கள் இந்த 1 டாலர் சம்பள முறையைப் பின்பற்றுகிறார்கள்.
IAS அதிகாரியாக உள்ள அமித் கட்டாரியா (Amit Kataria) போன்ற அதிகாரிகள், தாங்கள் நாட்டுக்குச் சேவை செய்யவே வந்துள்ளோம் என்பதை உணர்த்த 1 ரூபாய் சம்பளத்தை ஏற்றுக்கொண்டனர். முன்னாள் இந்தியப் பிரதமர் மறைந்த அடல் பிகாரி வாஜ்பாய் போன்றவர்கள் தங்களது அரசுப் பணிக்காக 1 ரூபாய் சம்பளத்தை மட்டும் வாங்கியுள்ளனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?















Click it and Unblock the Notifications