ரிவர்ஸ் கியர் போடும் தங்கம் விலை.. டிரம்ப் பாதிப்பு ரொம்ப மோசம்.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக்
சென்னை: கடந்த மாதத் தொடக்கத்தில் உச்சத்திற்குப் போன தங்கம் விலை, அதன் பிறகு மெல்லக் குறைந்தே வருகிறது. இதனால் மக்கள் குஷியில் உள்ளனர். இதற்கிடையே தங்கம் விலை குறைவதற்கான காரணத்தை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், வரும் காலங்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தவுடன் தங்கம் விலை பறக்கத் தொடங்கிவிட்டது. அதன் பிறகு டிரம்ப் தினசரி ஒரு அறிவிப்பு, சீனாவுடனான வரி என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்தைப் பண்ணத் தங்கம் விலை புதிய உச்சத்திற்குப் பறந்தது. குறிப்பாகக் கடந்த ஏப்ரல் 22ம் தேதி வரலாறு காணாத வகையில் ஆபரணச் சவரன் தங்கம் ஒரு சவரன் ரூ.74,320க்கு போனது.

தங்கம் விலை
ஆனால், அதன் பிறகு பிரேக் பிடித்த தங்கம் விலை, சட்டென ரிவர்ஸ் கியர் போட்டது. தொடர்ந்து தங்கம் ரேட் குறைந்தே வருகிறது. நேற்றைய தினம் ஒரு சவரன் ரூ.70,040க்கு விற்கப்பட்டது. தங்கம் விலை இப்படி சட்டென குறைந்து வருவது பலருக்கும் மகிழ்ச்சியைத் தருவதாகவே இருக்கிறது. அதேநேரம் தங்கம் விலை எந்தளவுக்குக் குறையும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கான பதிலைப் பிரபலப் பொருளாதார ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன் வழங்கியுள்ளார்.
ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "தங்கம் விலை ரூ.205 குறைந்து இருக்கிறது. இது வாங்க ஒரு நல்ல வாய்ப்பு... ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8755இல் இருக்கிறது. கோல்ட் பீஸில் கூட மக்கள் தங்கம் வாங்கும் ஆப்ஷன் இருக்கிறது. இப்போதைக்குக் குறையக் குறையத் தங்கம் வாங்குவதே பெஸ்ட். இப்போது குறைந்தாலும் அது ரிவர்ஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது.
அமெரிக்கப் பொருளாதாரம்
முதலில் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வந்துவிட்டது. ஆனால், அதெல்லாம் இல்லை என அங்குள்ளவர்கள் பூசி முழுகுகிறார்கள். ஆனாலும், டெக்னிக்கலாக பார்த்தால் நெகடிவ் வளர்ச்சி தான். பொருளாதார மந்தநிலை தான். ஏனென்றால் டிரம்ப்பிற்குப் பயந்து மார்ச் 31ம் தேதியே சீனாவில் இருந்து ஏகப்பட்ட சரக்குகளை இறக்கிவிட்டார்கள். எனவே, ஏற்றுமதியில் இறக்குமதியை மைனஸ் செய்யும் போது வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துவிட்டது.
இது ஜிடிபியில் ஒரு முக்கிய பங்காக இருக்கிறது. இதனால் ஜிடிபி நெகட்வில் தான் இருக்கிறது. ஆனால், இது இறக்குமதி திடீரென அதிகரித்ததால் ஏற்பட்டது. அடுத்த காலாண்டு சரியாகிவிடும் என அங்குள்ள சிலர் கூறிவருகிறார்கள். ஆனால், இது மட்டுமின்றி அமெரிக்காவில் மக்கள் செலவு செய்வதும் கூட கணிசமாகக் குறைந்துவிட்டது. இது ஒருபக்கம் இருக்கிறது.
என்ன நடக்கும்
அதேபோல மற்றொருபுறம் இப்போது அங்கே இறக்குமதி செய்தது காலியானவுடன் புதிய சரக்குகளை இறக்குமதி செய்ய வேண்டும். அப்போது விலைவாசி அதிகரிக்கும். டிரம்ப்பால் ஏற்பட்ட பாதிப்பு இதுதான். வரும் காலத்தில் இது இன்னும் மோசமாகும். மற்றொருபுறம் ரிசர்வ் வங்கியும் இந்திய ரூபாய் மதிப்பைப் பெரியளவில் குறைய விடாமல் தடுத்து வருகிறது. அதேநேரம் இதனால் இந்தியாவின் மருத்துவ மற்றும் ஐடி நிறுவனங்கள் பாதிக்கும். ஆனால், தங்கத்தில் நமது கணக்குச் சரியாகவே இருக்கிறது" என்றார்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்












Click it and Unblock the Notifications