அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்த வழக்கு: தடைவிதிக்க நீதிபதி மறுப்பு, ஓபிஎஸ்-இபிஎஸ்-க்கு நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்காலத்தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தவறு நடந்தது தெரிந்தால் ரத்து செய்யவும் தயங்க மாட்டேன் என தெரிவித்த நீதிபதி, வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ், தேர்தல் அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜன.7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதிமுக செயற்குழு

அதிமுக செயற்குழு

ஜெயலலிதா மறைவும் அதிமுகவில் மாற்றங்களும் அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். பொதுக்குழு கூடி அவரை ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் கூட்டாக தேர்வு செய்தனர். அவர் சிறைச் சென்றப்பின் அவரை கட்சியிலிருந்தும், பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கி ஓபிஎஸ்-இபிஎஸ் அமர்ந்தனர்.

 பொதுக்குழுவுக்கு அதிகாரம் கட்சி விதி திருத்தம்

பொதுக்குழுவுக்கு அதிகாரம் கட்சி விதி திருத்தம்

பொதுக்குழு கட்சித்தலைமையை தேர்வு செய்யும் அதிகாரம் உள்ளது என விதி திருத்தப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில் டிச. 1 அன்று கூடிய செயற்குழுவில் கட்சி தலைமையை தொண்டர்களே நேர்டையாக தேர்வு செய்வர் என விதி மீண்டும் திருத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கான அதிகாரம் அதிகரிக்கப்பட்டது. அவர்கள் தேர்வை பொதுக்குழு கேள்வி எழுப்ப முடியாது என விதிகளை திருத்தினர். உட்கட்சி தேர்தல் தேதி அறிவிப்பு இந்நிலையில் நேற்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

கே.சி.பழனிசாமி வழக்கு

கே.சி.பழனிசாமி வழக்கு

விதிகளை பின்பற்றாமல் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தலை ரத்து செய்யக்கோரி முன்னாள் எம்.பி.யும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனு அவசர வழக்காக நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது

 கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் வழக்கு தொடர முடியாது

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் வழக்கு தொடர முடியாது

அப்போது, 2018 ஆம் ஆண்டில் நீக்கப்பட்ட பிறகு அதை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் எப்படி வழக்கு தொடரமுடியும் என கேள்வி எழுப்பினார்.

கே.சி.பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆஜராகி தன்னை நீக்கிய பிறகுதான ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் தன்னை நீக்கம் செய்தது செல்லாது என்பதால் வழக்கு தொடர முடியும் என தெரிவிக்கப்பட்டது. விதிகளை மீறி தேர்தல் அறிவிக்கபட்டுள்ளதாகவும், தன்னைப்போல 27000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வழக்கில் இணைய தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

துரத்தப்பட்ட தொண்டர் முறையீடு

துரத்தப்பட்ட தொண்டர் முறையீடு

விருப்ப மனு வழங்கப்படாமல் வெளியேற்றப்பட்ட பிரசாத் சிங் ஆஜராகி விதிகளை பின்பற்றாமல் 5 நாட்களில் தேர்தல் நடைமுறையை முடிக்க முயற்சி நடப்பதாகவும், விருப்பமனு வாங்க சென்றபோது வெளியில் துரத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி இன்று வழக்கு தொடராவதவர்கள் வாதிட முடியாது என்றும், எதிர் தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்காமல் எப்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும், எதிர் தரப்பு விளக்கம் அளித்த பிறகு வழக்கு முகாந்திரம் இருந்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் தயங்காது எனவும் தெரிவித்தார்.

அதிமுக தரப்பு வாதம்

அதிமுக தரப்பு வாதம்

அதிமுக மற்றும் அதன் நிர்வாகிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், அரவிந்த் பாண்டியன், சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி மூன்றாண்டுகளாக கட்சியுடன் தொடர்பில்லாதவர் எப்படி வழக்கு தொடர முடியும் என்றும், நீக்கத்தை எதிர்த்து சிவில் வழக்காக தொடர்ந்த, வென்று, பின்னர் இந்த வழக்கை தொடரலாம் என விளக்கம் அளித்ததுடன், வழக்கில் பதிலளிக்க அவகாசம் கோரினர்.

இடைக்கால தடைவிதிக்க கோரிக்கை

இடைக்கால தடைவிதிக்க கோரிக்கை

கே.சி.பழனிசாமி தரப்பில், தேர்தலை 5 நாளில் அதிமுக நடத்தும் போது, பதில் மனுவை 2 நாளில் தாக்கல் செய்ய முடியும் என்றும், வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கவும், அதுவரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்தப்பட்டது. பதிலளிக்க நீண்ட அவகாசம் வழங்கினால், ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பிலும், காவல்துறை பாதுகாப்புடனும் தேர்தல் நடத்த வேண்டுமென இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்ப்பையும் கேட்காமல் இடைக்காலத்தடை விதிக்க முடியாது என்றும், மனுதாரர் விருப்பப்பட்டால் மனுவை தள்ளுபடி செய்வதாகவும், மேல்முறையீடு செய்து கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

சட்ட விதிமீறல் இருந்தால் தேர்தல் முடிவு ரத்து எச்சரித்த நீதிபதி

சட்ட விதிமீறல் இருந்தால் தேர்தல் முடிவு ரத்து எச்சரித்த நீதிபதி

அதேசமயம் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து நிர்வாகிகள் தேர்வு வரை சட்ட விதிமீறல் இருப்பது தெரியவந்தால், தேர்தல் முடிவுகள் ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

ஓபிஎஸ்-இபிஎஸ்-பொன்னையனுக்கு நோட்டீஸ்

ஓபிஎஸ்-இபிஎஸ்-பொன்னையனுக்கு நோட்டீஸ்

பின்னர் வழக்கு குறித்து அதிமுக, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் அதிகாரிகள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+