கல்வி நிறுவனங்களில் தடுப்பூசியைக் கட்டாயப்படுத்தக்கூடாது: தடை கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசியை தமிழ்நாடு அரசு கட்டாயப்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, இதில் எங்கே பொது நலன் இருக்கிறது? என்று பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வு கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
கல்வி நிறுவனங்களில் தடுப்பூசியை கட்டாயப்படுத்தும் சர்குலர்
கல்வி வள மேம்பாடு அறக்கட்டளை என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், "கொரோனா தடுப்பூசியை தனாக முன் வந்து செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்திய நிலையில், தமிழகத்தில், கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசியை தமிழக அரசு கட்டாயப்படுத்துகிறது, இதுகுறித்தான சர்க்குலர்கள் அனுபப்பட்டுள்ளது. ஒரு சிலர் பாரம்பரிய மருத்துகளை விரும்புவார்கள். ஆகவே கட்டாயம் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று வலியுறுத்த கூடாது என்று உத்தரவிடவேண்டும்" எனக்கோரி இருந்தது.
பொது நல வழக்கு அல்ல பொது நலனுக்கு எதிரான வழக்கு
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேவசலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து கேள்வி எழுப்பிய பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, "இந்த வழக்கில் என்ன பொதுநலன் உள்ளது, இந்த மனு பொது நலனுக்கு எதிரானது. ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல விரும்பினால், மாணவர்களின் நலன் கருதி தடுப்பூசி போட வேண்டும்" என்று சுட்டிக்காட்டியது.

வழக்கு தள்ளுபடி
தடுப்பூசியை இலவசமாக போடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள். தற்போது இரண்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட நிலையில், நாளை இதற்கு மாற்று கூட வர வாய்ப்புள்ளது என்றும் மாணவர்களின் நலன் கருதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications