Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டுக்குள் இறங்கிய முகமூடி கொள்ளையர்கள்.. ஒற்றை ஆளாய் தடுத்து விரட்டிய பஞ்சாப் சிங்க பெண்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: உங்கள் வீட்டில் யாரும் இல்லை. நீங்கள் தனியாக இருக்கும்போது கொள்ளையர்கள் வந்தால் எப்படி இருக்கும். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண் வீட்டில் குழந்தைகளுடன் இருந்தபோது கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். அவர்களை ஒற்றை ஆளாக தடுத்து நிறுத்தி வெற்றி பெற்றுள்ளார் அந்த சிங்கப் பெண்.

நாடு முழுவதும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. தொழில் நுட்பங்கள் வளர்ந்தாலும், டிஸைன் டிஸைனாக யோசித்து கொள்ளை அடித்து கொண்டிருக்கின்றனர். வீடுகள், கோயில்கள், வாகனங்கள், வங்கிகள், ஏடிஎம், என்று பல கொள்ளைகள் உள்ளன. பொதுவாக கொள்ளையர்களே காவல்துறை துணிந்து பிடிப்பதே அரிதாகத்தான் நடக்கும்.

punjab woman

சமீபத்தில் கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து முன்று ஏடிஎம்களில் ஹரியானாவைச் சேர்ந்த கும்பல் கொள்ளையடித்தது. இந்த கும்பலை தமிழ்நாடு போலீஸ், சேஸிங், துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த சம்பவம் பாராட்டை பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் வீட்டில் கொள்ளையடிக்க வந்த கும்பலை எதிர்த்து, தனி ஒருத்தியாக பெண் துணிந்து போராடி கெத்து காட்டியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம், அம்ரித்சர் பகுதியைச் சேர்ந்தவர் மந்தீப் கவுர். இவருக்கு ஜக்ஜீத் சிங் என்ற கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கணவர் ஜக்ஜீத் சிங் வேலைக்கு சென்றிருந்த நிலையில், நேற்று மாலை மந்தீப் தன் இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மந்தீப் துணி வைத்துக் கொண்டிருந்தபோது, அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

முகமூடி அணிந்த மூன்று கொள்ளையர்கள் அவர்களின் வீட்டை நோக்கி கொள்ளையடிக்க வந்துள்ளனர். சிசிடிவி கேமரா மூலம் மந்தீப் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். கொள்ளையர்கள் தடுப்பு சுவர் ஏறி குதித்து, வாசல் கதவு அருகே வந்துள்ளனர். அவர்கள் கதவை உந்தித் தள்ளினார்கள். மந்தீப் தனி ஆளாக அவர்களுக்கு கடுமையான போட்டி கொடுத்து கதவை திறக்க முடியாமல் பார்த்துக் கொண்டார்.

punjab woman

ஒரு கட்டத்தில் மந்தீப் சத்தம் போட்டுக் கொண்டே கதவை அடைத்துவிட்டார். தொடர்ந்து அருகில் இருந்த சோபாவை இழுத்து கதவுடன் சேர்த்து வைத்தார். இதனால் கொள்ளையர்களால் கதவை திறக்க முடியவில்லை. இருப்பினும் கொள்ளையர்கள் அங்கும், இங்கும் சுற்றி வீட்டுக்குள் நுழைய முயற்சித்தனர்.

கொள்ளையர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நோட்டமிட்டுக் கொண்டே, மந்தீப் அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடினார். செல்போனிலும் சிலரை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். இந்த சிசிடிவி காட்சியில் மந்தீப்பின் மகன், மகள் ஆகியோரும் பதவாகியுள்ளனர்.

கொள்ளையர்கள் பல்வேறு முயற்சிகள் செய்தும் வீட்டுக்குள் நுழைய முடியவில்லை. இதனால் அவர்கள் ஒருகட்டத்தில் சோர்வடைந்து அங்கிருந்து சென்றுவிட்டனர். அதன்பிறகு தான் மந்தீப்பும், அவரின் குழந்தைகளும் நிம்மதியடைந்தனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொள்ளையர்களை ஒற்றை ஆளாக, துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய மந்தீப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மந்தீப் கணவர் ஜக்ஜீத் சிங் தங்கநகை வியாபாரி. அதன் காரணமாக கொள்ளையர்கள் கொள்ளையடிக்க வந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மந்தீப் கூறுகையில், "கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது. நாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. என் குழந்தைகள் மிகவும் பயந்துள்ளனர். கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+