இனிமேல் எங்களை உரசினால் பதிலடி கடுமையாக இருக்கும்.. பிரதமர் மோடி எச்சரிக்கை
சண்டிகர்: பஞ்சாப்பில் உள்ள ஆதம்பூர் விமானப்படைத் தளத்தில் அங்குப் பாதுகாப்புப் படை வீரர்களிடையே உரையாற்றினார். இனி மேல் எல்லை மீறினால் பதிலடி வலிமையாக இருக்கும் எனப் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், இந்த வெற்றியை எல்லையைப் பாதுகாக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூரில் பஞ்சாப்பில் உள்ள ஆதம்பூர் விமானப்படைத் தளம் மிக முக்கிய பங்கு வகித்தது. இன்று திடீரென அந்த முகாமிற்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குப் பாதுகாப்புப் படை வீரர்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, நமது விமானப்படை பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைத் துல்லியமாகத் தாக்கியுள்ளது என்றும் பாக். இதயத்தை நாம் எப்போது துளைத்துத் தாக்கினோம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், விமானப்படை மற்றும் ராணுவப்படைக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மிகச் சிறப்பாக இருந்தது என்ற அவர், நமது அதிநவீன தொழில்நுட்பத்தோடு பாகிஸ்தானால் போட்டிப்போட முடியாது என்றும் நம்மிடம் உலகின் தலைசிறந்த தொழில்நுட்பம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே நமது விமானப்படைத் தளத்தைத் தாக்கும் அவர்களின் எண்ணம் பலிக்கவில்லை என்ற அவர் எல்லையைப் பாதுகாக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் எனத் தெரிவித்தார். மேலும், எஸ் 400 பாதுகாப்பு அமைப்பு நமக்கு வலிமையான பாதுகாப்பை அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தான் இனியும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால் பதிலடி கடுமையாக இருக்கும் என்ற அவர், பாகிஸ்தான் தீவிரவாத முகாம், விமானத் தளங்கள் மட்டுமின்றி, அவர்களின் தீய நோக்கத்தையும் தகர்த்தீர்கள் என்றும் தெரிவித்தார். நமது லட்சுமண ரேகை என்பது பயங்கரவாதிகளை அழிப்பது மட்டுமே என்று குறிப்பிட்ட அவர், இன்னொரு முறை பாகிஸ்தான் நம்மை உரசிப் பார்த்தால் தாக்கினால் சரியான பதிலடி தருவோம் என்று தெரிவித்தார்.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்?












Click it and Unblock the Notifications