‛டார்க்கெட் மத்திய அரசு’.. மீண்டும் டெல்லி கிளம்பும் விவசாயிகள்! ஹரியானாவில் 3 நாள் ‛இன்டர்நெட் கட்’
சண்டிகர்: மத்திய அரசுக்கு எதிராக வடமாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் விஸ்வரூபமெடுத்துள்ளது. டெல்லி நோக்கி அவர்கள் புறப்படும் நிலையில் நாளை முதல் 13ம் தேதி வரை 7 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவையை ரத்து செய்து ஹரியானா பாஜக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஹரியானாவில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் இருக்கிறார். இந்த மாநிலத்தில் ஏராளமான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் விவசாய சங்கங்கள் அதிகமாக உள்ளன.

இந்நிலையில் தான் மத்திய அரசு அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கூறி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இன்னும் செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில் தான் அனைத்து பயிர்களுக்கும் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யும் சட்டம் கொண்டு வர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் முற்றுகை போராட்டம் நடத்த விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சார், கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்பட 200 விவசாய அமைப்புகள் இந்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இவர்கள் டெல்லியில் மிகப்பெரிய அளவில் மத்திய அரசுக்கு எதிராக முற்றுகை போராட்டத்தை பிப்ரவரி 13ம் தேதி மேற்கொள்ள உள்ளனர். இதற்காக அவர்கள் நாளை முதல் ஹரியானாவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு செல்ல உள்ளனர். இத்தகைய சூழலில் தான் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதாவது நாளை முதல் வரும் 13ம் தேதி வரை ஹரியானாவில் 7 மாநிலங்களில் இன்டர்நெட் சேவையை துண்டிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி அம்பாலா, குருசேத்ரா, கைதால், ஜிண்ட், ஹிசார், பாதிகாரபாத், சிர்சா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை நாளை முதல் 3 நாட்கள் துண்டிக்கப்பட உள்ளது.
அதன்படி ஒரே நேரத்தில் அதிகமானவர்களுக்கு மெசேஜ் அனுப்பும் வசதி, இண்டர்நெட் வசதி என்பது துண்டிக்கப்பட உள்ளது. செல்போன்களில் மட்டும் பேசி கொள்ள முடியும். இந்த இன்டர்நெட் சேவை ரத்து தொடர்பான உத்தரவு என்பது நாளை காலை 6 மணி முதல் பிப்ரவரி மாதம் 13ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஹரியானாவில் பல இடங்களில் விவசாயிகளின் ஊர்வலத்தை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைத்துள்ளனர். இதுதவிர விவசாயிகளின் இந்த போராட்ட அறிவிப்பை தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் பாதைகளில் விரிவான கண்காணிப்பு பணிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications