Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆங்கிலேயர்களைப் போல பஞ்சாப்பை கொள்ளையடிக்க வந்த கெஜ்ரிவால்: முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி சாடல்

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஆங்கிலேயர்களைப் போல பஞ்சாப்பை கொள்ளையடிக்க வந்துள்ளார் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி கடுமையாக சாடியுள்ளார்.

117 இடங்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் பஞ்சாப் மாநில அரசியல் கட்சிகள் வேண்டுகோளை ஏற்று பிப்ரவரி 20-ந் தேதிக்கு வாக்குப் பதிவு ஒத்திவைக்கப்பட்டது.

Charanjit Singh Channi slams Kejriwal

பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரையில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்பது பொதுவான கருத்து கணிப்பு. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும்; ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்பதும் கருத்து கணிப்புகளின் முடிவுகள்.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக சரண்ஜித் சிங் சன்னி கூறியதாவது: ஆங்கிலேயர்கள் இந்தியாவை கொள்ளையடிக்க வந்தனர். அதே பாணியில் டெல்லியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலும் அவரது குடும்பத்தினரும் பஞ்சாப்பை கொள்ளையடிக்க வந்துள்ளனர்.

ஆனால் முகலாயர்களுக்கும் பிரிட்டிஷ் படையினருக்கும் பஞ்சாப் எப்படியான எதிர்ப்பை காண்பித்ததோ அதேபோல கெஜ்ரிவால் குடும்பத்துக்கும் கடும் எதிர்ப்பை பஞ்சாப் மக்கள் வெளிப்படுத்துவார்கள். பஞ்சாப் தேர்தலில் கெஜ்ரிவால் குடும்பத்தினர் தீவிர பிரசாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+