பஞ்சாப் சட்டசபை தேர்தல்: காங். முதல்வர் வேட்பாளர் பிப்ரவரி 6-ல் அறிவிப்பு
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது நாளை மறுநாள் பிப்ரவரி 6-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 20-ந் தேதி நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரையில் தொங்கு சட்டசபைதான் உருவாகும்; எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்கின்ற கருத்து கணிப்புகள்.
தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியைவிட ஆம் ஆத்மி கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்; காங்கிரஸுக்கு 2-வது இடம்தான் என்றும் அக்கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸில் யார் முதல்வர் வேட்பாளர் என்கிற குழப்பம் தொடருகிறது. தற்போதைய முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி, மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து ஆகிய இருவருமே தாங்களே முதல்வர் வேட்பாளர் என மல்லுக்கட்டுகின்றனர். நவ்ஜோத்சிங் சித்து, டெல்லி மேலிடம் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்க கூடாது; மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்கிறார்.
இதனிடையே சண்டிகரில் இன்று பஞ்சாப் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும் மூத்த தலைவருமான ஹரீஷ் சவுத்ரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாளை மறுநாள் லூதியானாவில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும். மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்றார்.












Click it and Unblock the Notifications