ஹரியானாவில் இன்று விவசாயிகள் போராட்டம்- பெரும் எண்ணிக்கையில் போலீஸ் குவிப்பால் பதற்றம்
சண்டிகர்: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மீது ஹரியானாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக ஹரியானாவில் இன்று விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளதால் பெரும் எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அண்மையில் ஹிசார் பகுதியில் கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து அங்கு போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இதனால் விவசாயிகள் மீது கொலை, கலவரம் ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக கூடுதல் என பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யபட்டன.
மொத்தம் 350 விவசாயிகள் மீது இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹரியானா போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளனர். இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக 3,000க்கும் மேற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்தும் அதிரடிப்படை போலீசார் ஹரியானாவின் ஹிசாரில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.
இதனிடையே வரும் 26-ந் தேதி டெல்லி எல்லைகளில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு நாடு தழுவிய போராட்டத்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications