ADGP புரன் குமார் தற்கொலை.. திடீரென துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார்.. ஐபிஎஸ் அதிகாரி துயர முடிவு
சண்டிகர்: ஹரியானாவில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வந்த ஒய் புரன் குமார் என்ற மூத்த ஐபிஎஸ் அதிகாரி தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானாவில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வந்தவர் ஒய் புரன் குமார். இவர் சண்டிகர் செக்டார் 11 பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் தான் அவர் தனது துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதுதொடர்பாக சண்டிகர் சீனியர் எஸ்பிப கன்வார்தீப் கவுர் கூறுகையில், ‛‛இன்று ஐபிஎஸ் அதிகாரி புரன் குமார் தற்கொலை செய்து கொண்டதாக மதியம் 1.30 மணியளவில் செக்டார் 11 போலீஸ் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
மத்திய தடயவியல் நிபுணர்களும் வந்தனர். விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணைக்கு பிறகு பிற தகவல்கள் தெரியவரும்'' என்று கூறியுள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.
அவரது மனைவியான மூத்த ஐபிஎஸ் அதிகாரி அம்நீத் பி குமார் ஜப்பானில் உள்ளார். ஹரியானா முதல்வர் நயிப் சிங் சைனி தலைமையில் அதிகாரிகள் குழு ஜப்பான் சென்ற நிலையில் அவருடன் அம்நீத் பி குமார் சென்றுள்ளார்.












Click it and Unblock the Notifications