ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு - 65% வாக்குகள் பதிவு!
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியது.
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை சில இடங்களிலும் பல பகுதிகளில் மாலை 5 மணி வரையிலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இன்றைய வாக்குப் பதிவில் சுமார் 65% வாக்குகள் பதிவாகின.
ஹரியானா, மகாராஷ்டிரா தேர்தலை தொடந்து தற்போது ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. ஜார்க்கண்ட்டில் மொத்தம் 81 தொகுதிகள் உள்ளன. நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன.

டிசம்பர் 23-ல் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜார்க்கண்ட்டில் மொத்தம் 37,83,055 வாக்காளர்கள் இருக்கிறார்கள். அதில் பெண் வாக்காளர்கள் மொத்தம் 18,01,356 இருக்கிறார்கள். பாதுகாப்பு கருதி, நக்சல் பிரச்சனை காரணமாகவும் இந்த தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற தேர்தல் அதிகம் நக்சல் பிரச்சனை உள்ள பகுதிகள் ஆகும். ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு இன்று 4ம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக 3ம் கட்ட தேர்தல் டிசம்பர் 12ம் தேதி நடைபெற்றது. 3ம் கட்டத்தில் தலைநகர் ராஞ்சி, ராம்கர், ஹசாரிபாக், கோடேர்மா, சத்ரா, கிரிடி மற்றும் சரிகேலா-கர்சவன் ஆகிய மாவட்டங்களில் உள்ள 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 4வது கட்ட தேர்தல் தன்பத், தியோகர், கரித், பக்ரோ ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்றது.
பல இடங்களில் மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது. சில இடங்களில் மாலை 3 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இன்று சுமார் 65% வாக்குகள் பதிவாகி இருந்தன
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications