விடிகாலையில் கேட்ட சத்தம்.. தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் திடீர் தற்கொலை.. பரபரப்பு
துப்பாக்கி சுடும் வீரர் நமன்வீர் சிங் பிரார் தற்கொலை செய்து கொண்டார்
சண்டிகர்: தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் நமன்வீர் சிங் பிரார், தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
தேசிய துப்பாக்கி சுடும் வீரர் நமன்வீர் சிங் பிரார்.. 29 வயதாகிறது.. இவர் பயிற்சியாளரும்கூட.. மொஹாலியின் செக்டர் 71-ல் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை தன்னுடைய ரூமிலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை
விடிகாலை நேரத்தில் துப்பாக்கி சுடும் சத்தத்தை கேட்டதுமே, வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர்.. ரத்தம் வழிந்த நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ந்தனர்.. எனினும், அவரை மொஹாலியின் 6-வது கட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போஸ்ட் மார்ட்டம்
இதையடுத்து, சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது... இந்த கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது உடனடியாக தெரியவில்லை.. அதற்குள் தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர்.. இந்த கொலை தொடர்பான விசாரணையும் துவங்கி உள்ளனர்.

விசாரணை
இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் அமன்தீப் சிங் சொல்லும்போது, "நமன்வீர் சிங் தன்னுடைய ரூமில் தனியாகத்தான் இருந்துள்ளார்.. அப்போது அதிகாலை 3:35 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.. உரிமம் பெற்ற ஆஸ்திரியாவில் தயாரிக்கப்பட்ட க்ளோக் துப்பாக்கியால, தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார்.. இதற்கான காரணத்தை விசாரித்து வருகிறோம்" என்றார்.

தங்கம் வென்றவர்
தற்கொலை செய்து கொண்ட வீரர், டிஏவி கல்லூரி, செக்டர் 10, மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார்.. இந்திய பல்கலைக்கழக சாம்பியன்ஷிப் மற்றும் உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் இரட்டை ட்ராப் துப்பாக்கி சுடுதல் நிகழ்வில் வெண்கலம் வென்றவரும்கூட.. அதேபோல, மாஸ்டர்ஸ் மீட் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் தட்டி சென்றவர்.. கடந்த சில வருடங்களாகவே, இளம் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications