விடிகாலையில் கேட்ட சத்தம்.. தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் திடீர் தற்கொலை.. பரபரப்பு
துப்பாக்கி சுடும் வீரர் நமன்வீர் சிங் பிரார் தற்கொலை செய்து கொண்டார்
சண்டிகர்: தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் வீரர் நமன்வீர் சிங் பிரார், தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
தேசிய துப்பாக்கி சுடும் வீரர் நமன்வீர் சிங் பிரார்.. 29 வயதாகிறது.. இவர் பயிற்சியாளரும்கூட.. மொஹாலியின் செக்டர் 71-ல் வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை தன்னுடைய ரூமிலேயே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை
விடிகாலை நேரத்தில் துப்பாக்கி சுடும் சத்தத்தை கேட்டதுமே, வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்தனர்.. ரத்தம் வழிந்த நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ந்தனர்.. எனினும், அவரை மொஹாலியின் 6-வது கட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போஸ்ட் மார்ட்டம்
இதையடுத்து, சடலம் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டது... இந்த கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது உடனடியாக தெரியவில்லை.. அதற்குள் தகவலறிந்து போலீசார் விரைந்து வந்தனர்.. இந்த கொலை தொடர்பான விசாரணையும் துவங்கி உள்ளனர்.

விசாரணை
இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் அமன்தீப் சிங் சொல்லும்போது, "நமன்வீர் சிங் தன்னுடைய ரூமில் தனியாகத்தான் இருந்துள்ளார்.. அப்போது அதிகாலை 3:35 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.. உரிமம் பெற்ற ஆஸ்திரியாவில் தயாரிக்கப்பட்ட க்ளோக் துப்பாக்கியால, தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார்.. இதற்கான காரணத்தை விசாரித்து வருகிறோம்" என்றார்.

தங்கம் வென்றவர்
தற்கொலை செய்து கொண்ட வீரர், டிஏவி கல்லூரி, செக்டர் 10, மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார்.. இந்திய பல்கலைக்கழக சாம்பியன்ஷிப் மற்றும் உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகளில் இரட்டை ட்ராப் துப்பாக்கி சுடுதல் நிகழ்வில் வெண்கலம் வென்றவரும்கூட.. அதேபோல, மாஸ்டர்ஸ் மீட் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் தங்கம் தட்டி சென்றவர்.. கடந்த சில வருடங்களாகவே, இளம் துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications