பஞ்சாப் தேர்தல்.. இரு தொகுதிகளில் களமிறங்கும் சரண்ஜித் சிங் சன்னி.. முதல்வர் வேட்பாளராவது உறுதி?
சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார்.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி துவங்கி பல கட்டங்களால நடைபெற உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

தேர்தல்
சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு ரவிதாஸ் ஜெயந்தி ஆண்டுதோறும் பிப்ரவரி 10 முதல் 16 வரை கடைபிடிக்கப்படுவதால், அந்த சமயத்தில் தேர்தல் வைத்தால் சீக்கியர்கள் வாக்கு குறையும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 14-ம் தேதிக்கு பதிலாக பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறும் என அறிவித்தது தேர்தல் ஆணையம்.

பாஜக
இதையடுத்து ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ், அதை தக்க வைக்க பெரு முயற்சி எடுத்து வருகிறது. காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் முதல் மந்திரி அமரீந்தர் சிங், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். காங்கிரசுக்கு இந்தக் கூட்டணி கடும் சவாலை அளிக்கும் எனத் தெரிகிறது. அதே போல டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டமும் பாஜக-வுக்கு பின்னடைவை கொடுக்கும் எனத் தெரிகிறது.

காங்கிரஸ்
இதற்கிடையே, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளில் முதற்கட்டமாக 86 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வெளியிட்டது. அதில் முதலமைச்சர் சரண் ஜித் சன்னி சாகிப் தொகுதியிலும், நவ்ஜோத் சிங் சித்து கிழக்கு அமிர்தசரஸ் தொகுதியிலும், சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட், மோகா தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

3வது பட்டியல்
இந்நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 8 பேர் கொண்ட 3-வது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது. இதில் பஞ்சாப் முதல் மந்திரி சரண்ஜித் சிங் சன்னி பதூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. முதற்கட்டமாக வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் முதலைமைச்சர் சரண்ஜித் சிங் சாகிப் தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டு தொகுதிகள்
இந்நிலையில், 3வது பட்டியலிலும் முதல்வர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து இரண்டு தொகுதிகள்ளில் போட்டியிடுகிறார் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி. தற்போதைய முதல்வருக்கு இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதையடுத்து, மீண்டும் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் தான் என்று அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
-
திமுக - காங்., கூட்டணியில் புதிய புயல்.. ‘கை' வென்ற 7 தொகுதிகளை கேட்கும் ‘உதயசூரியன்'.. குழப்பம் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
சீட் நம்பரை குறைக்கும் திமுக.. ஏன் அதிக தொகுதிகள் வேண்டும்? அழுத்தமாக பேசிய கே.பாலகிருஷ்ணன்! -
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications