50 ஆயிரம் கடன் கேட்க சென்ற டீக்கடைக்காரர்.. 51 கோடியை எப்போது கட்ட போறீங்க.. ஷாக் கொடுத்த வங்கி

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் டீக்கடைக்காரர் ஒருவருக்கு ரூ 51 கோடி கடனை திருப்பிச் செலுத்துமாறு நோட்டீஸ் வந்ததை அடுத்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையால் நாடு முழுவதும் ஜூலை 31 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தனது டீக்கடையை அவர் மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

Tea seller gets notice from bank to repay Rs 51 crore

மீண்டும் டீக்கடையை திறக்க வேண்டி, ரூ 50 ஆயிர்ம கடன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்திருந்தார். அவரது பெயர் மற்றும் சுய விவரங்களை சரி பார்த்த வங்கி அதிகாரிகள் நீங்கள் இந்த வங்கியில் ஏற்கெனவே ரூ 51 கோடி கடன் பெற்றுள்ளீர்கள்.

இப்போதும் மீண்டும் கடன் கேட்டால் எப்படி தருவது? முதலில் வாங்கிய கடனை கட்டுங்கள் என அதிகாரிகள் கூறியது ராஜ்குமாரை அதிர்ச்சி அடைய செய்தது.

உடனே திடுக்கிட்ட ராஜ்குமார், "சாதாரண டீக்கடையை நான் நடத்தி வருகிறேன். இதுவரை எந்த வங்கியிலும் நான் கடன் வாங்கியதே இல்லை. அப்படியிருக்கும் போது எப்படி 51 கோடி கடனாக பெற்றிருப்பேன்? என கேட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+