மகாபஞ்சாயத்து கூட்டத்தில் திடீரென சரிந்த மேடை... மொத்தமாக கீழே விழுந்த விவசாய சங்க தலைவர்கள்!
சண்டிகர்: ஹரியானாவில் மகாபஞ்சாயத்து நடைபெற்று கொண்டிருந்தபோது அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடை திடீரென சரிந்து விழுந்தது.
அந்த மேடையில் இருந்த பாரதிய கிசான் யூனியனின் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் திகைத் உள்பட விவசாய சங்க தலைவர்கள் சிலர் கீழே விழுந்தனர்.
மகாபஞ்சாயத்துகள் என்பது பல நூறு கிராமத்தினர் ஓர் அணியாய் திரள்வது ஆகும். இந்த மகாபஞ்சாயத்துகள் அடுத்து நடைபெறவுள்ள போராட்டங்களில் முக்கியப் பங்காற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

திசைமாறிய பேரணி
டெல்லியில் குடியரசு தினம் அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி திசை மாறியது. போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினார்கள். டெல்லி செங்கோட்டையில் ஏறி விவசாய சங்க கொடிகள் ஏற்றப்பட்டன. டெல்லி முழுவதும் பதற்றம் நிலவியது. இதனை தொடர்ந்து விவசாயிகள் காசிப்பூர் எல்லை உள்பட டெல்லியின் பல்வேறு பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மகாபஞ்சாயத்து என்றால் என்ன?
மேலும், ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொள்ளும் மகாபஞ்சாயத்து என்ற மாபெரும் கூட்டமும் கூட்டப்பட்டு வருகிறது. மகாபஞ்சாயத்துகள் என்பது பல நூறு கிராமத்தினர் ஓர் அணியாய் திரள்வது ஆகும். இப்படி நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கூடும் மகாபஞ்சாயத்துகள் அடுத்து நடைபெறவுள்ள போராட்டங்களில் முக்கியப் பங்காற்ற உள்ளதாக கூறப்படுகிறது.

ராகேஷ் திகைத் உரையாற்றினார்
இந்த நிலையில் ஹரியானாவின் முதல் மகாபஞ்சாயத்து காண்டேலா கிராம விளையாட்டு மைதானத்தில் நடந்தது. பாரதிய கிசான் யூனியனின் (பி.கே.யூ) தலைவர் ராகேஷ் திகைத் உள்பட விவசாய சங்க தலைவர்கள் சிலர் விவசாயிகளின் மத்தியில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நின்று உரையாற்றிக் கொண்டிருந்தனர்.

திடீரென சரிந்த மேடை
அப்போது எதிர்பாராதவிதமாக மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதனால் ராகேஷ் திகைத் உள்பட விவசாய சங்க தலைவர்கள் அப்படியே கீழே விழுந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மேடை சரிந்து விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications