அதிமுக சட்ட விதிகளில் மாற்றம்: கட்சித்தலைமை தேர்வில் மாற்றம்
அதிமுக செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழு பலத்த எதிர்ப்பார்ப்புடன் தொடங்கிய நிலையில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒற்றைத்தலைமை நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் ஒற்றை வாக்கில் தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழு
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மோதலுடன் முடிவடைந்த நிலையில் இன்று கூடிய செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஓபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் அதிகாரம் அதிகரிக்கும் வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கட்சியின் சட்ட விதிகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனர். இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றைவாக்கு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்சியில் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வர், கட்சியின் திட்ட விதிகளை மாற்றும் அதிகாரம் பொதுக்குழுவிற்கு உண்டு என திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதிமுகவின் விதி என் 20 பிரிவு 2 , விதி எண் 40 உள்ளிட்டவற்றில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது