தமிழகத்தில் குறைந்து வருகிறது கொரோனா பாதிப்பு- இன்று 1,114 பேருக்கு தொற்று உறுதி
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று 1,114 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

தமிழகத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று 72,568 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் 1,114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 8,06,891 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 15 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 8 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 7 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 11,983.
தமிழகத்தில் இன்று 1,198 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் மொத்தம் 7,85,315 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
தற்போதைய நிலையில் 9,593 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில்தான் இன்று 325 பேருக்கு கொரோனா உறுதியானது. கோவையில் 112 பேருக்கும் செங்கல்பட்டில் 81 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications