"ஸ்பெஷல் கிளாஸ்".. பள்ளி மாணவர்களுக்கு பறந்து வந்த திடீர் உத்தரவு.. இனிமேல் இப்படித்தானாம்.. அதிரடி
: பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையில் ஸ்பெஷல் கிளாஸ் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஸ்பெஷல் கிளாஸ் குறித்து, தமிழக பள்ளிக்கல்வி துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் கல்வித்திறனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்துடன் மாணவர்களின் கல்வித் திறன்களை மேம்படுத்தவும் பல முயற்சிகளையும் எடுத்து வருகிறது அரசு.
அந்தவகையில், மாணவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது என்பதற்காக, சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது..

பர்மிஷன்
ஆனால் சில நாட்களுக்குமுன்பு, தமிழக பள்ளிகளில் 10,11, 12 வகுப்புகளுக்கு சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி வழங்கி பள்ளிக்கல்வித்துறை திடீர் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.. பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் கூறியிருந்தது.

ரிவிஷன் டெஸ்ட்
இந்நிலையில், சில தனியார் பள்ளிகள் மீது புகார்கள் வெடித்துள்ளன.. 1 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் முதல் பருவ தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது.. 21ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இந்த தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.. இதையடுத்து, அக்டோபர் 1-ம் தேதி முதல் காலாண்டு விடுமுறை மாணவர்களுக்கு விடப்பட்டுள்ளது...

ஸ்பெஷல் கிளாஸ்
6 முதல் 12ம் வகுப்பு வரையிலுள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 10ம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 13ம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்படி விடுமுறையையும் அறிவித்துவிட்டு, மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ்களையும் சில தனியார் பள்ளிகள் நடத்தி வருகிறதாம்.. தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் பறந்தன..

ஸ்ட்ரிக்ட் ஆர்டர்
இதையடுத்து, பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிகளை திறந்து சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று கண்டிப்புடன் கூறியுள்ளது.. அப்படி ஒருவேளை, பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும், தேவைப்பட்டால் மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதியை பெற்று சிறப்பு வகுப்பு நடத்திக் கொள்ளலாம், அதுவும் அரைநாள் மட்டுமே நடத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications